Thursday, June 30, 2011

முளைக்கும் விதைகள்


                        பாடும் பறவை -2


பாலும், பாதுகாப்பும் குழந்தைகளின் நரம்பை முறுக்கேற்றினார்கள். வளர்ந்தவன் கிழங்களின் கழுத்தை இறுக்க நரம்பை கயிறாக்கி காத்திருக்கிறான்

யாருக்கும் தெரியாது நான் உன்னைக் காதலிப்பது. நல்லதுதான். சுலபமாய் விலகிக்கொள்ள பயன்படும்.

மக்களுக்கும் பழிவாங்கத்தான் தெரிகிறது, திருத்தத்தெரியவேயில்லை. அதற்காக யோசிப்பதும் இல்லை. மாறி மாறி ஜெயிக்கும் அரசியவாதிகளைப்போல்.  

வெற்றியின் துணை எப்போதும் அன்பில் கூட்டங் கூடுவதனாலே கிடைக்கும். பிழைப்புக்கான கூட்டம் பல நேரம் தோல்வியை தரிசிக்கும்.

தாழக்கிடக்கிற வானத்தின் நட்சத்திரங்களை பறிக்கிறான் தகப்பனிடம் பாகம்பிரித்தவன். தொங்கும் மாங்கனி தூரமென ஏங்குகிறான் பரம்பரை தரித்திரன்.

முகத்தை தீய்க்க கதிர்களை பாய்ச்சுகிறாய், நீ சூரியனாக இருந்தாலும் பயமில்லை. என் வீட்டு தென்னை மரத்தின் கீற்றால் நீ மறைந்துவிடுகிறபோது.

ஆரோக்கியதிற்காக வருஷம் தவறாது தன்னை எக்ஸ்ரே எடுத்துக்கொள்கிறதா? ஆடகளைக்கலைந்து அம்மணமாய் நரம்புகள் தெரிய இலையுதிர்ந்து நிற்கும் மரங்கள்.

துரோகம்,ஏமாற்று,ஊழல், பகலில் சுற்றி கொக்கறித்து நடமாடும்ஆவிகள். நேர்மை,இரக்கம்,உண்மை பித்தென விலங்கிட்டுகதவுக்கு ஆணிவைத்தோம்.இது தற்காலம்

கழிவிலும், ஒதுக்கப்பட்டதிலும் மனமுவந்து தனக்கானதை எடுக்கும் பன்னி முற்போக்கு செயலை கடைபிடிக்கிறது. நல்ல இலக்கியவாதியின் குரு பன்னிதான்.

பரந்த சிறுமணல் மனதின் மகிவைத்தூண்டும். பசி எழுப்பும் உணர்வின் நுனியையும் தணிக்காது.வாசல் கத்தும் காக்கையின் முகத்தில் துப்பும் மனிதன்போல்

முகத்தோடு முகம் முட்டி,தான் கண்ட களஞ்சியத்தின் குறிப்பு சொல்லி விலகும்,வரிசையில் வரும் எறும்பு. ஒழுங்கோடு பகிர்தலும் நாம் எறும்பிடம் கற்கவேண்டும்.

நீரை விழுங்கியிருக்கும் காற்று காமத்தை தூண்டுவதேயில்லை. இருந்தாலும் தொடர்கிறேன் காற்றை, வாழ்வைப்போல

காமத்தில் துரத்தும் கூட்டு நாய்களுடன் ஒரு நாயாக வருகிறான். காதலுடன், எந்த உறவையும் மறுக்கிறான். மேல் பாரம் முற்றிலும் குறைந்த என்னிடம்.

அறைமூடி உறங்கியும் பொறுப்புள்ள ஆண்மாக்கள் வெளிஉலகின் எல்லை கடந்த பிம்பங்களை தரிசிக்கிறது. வெளிச்சிதறல்களை கிரகித்து உலவும் பிம்பம்.

கைவிடுதலை சகித்து வாலியில் விழும், குழாயில் கசியும் சொட்டுநீர். புதிய செயல்கான வீரியமுடன் முன்னோரில் கலக்கிறது.மனிதனுக்கு வழிகாட்டியாய்.

மெளனமான இரவின் ஒத்தை அறையில் இடைவெளிதுரந்து புழங்காத தம்பதிகள் கூட்டு வாழ்வின் விலகளை வளர்பிரையாய் தொடர்ந்து, கடந்து முடிவை எட்டுகிறார்கள்.


ஜேடி


No comments: