Wednesday, June 15, 2011

கவிதை

போனதுபோல் திரும்பாதே தம்பி


தார் பொங்கி நிற்கும் சாலையில்
நான் வெறுங்காலோடு
செய்துவிட்டு வந்துவிடுகிறேன்
நீ
போனதுபோல் திரும்பி விடாதே தம்பி

பால் உண்டுக்கொண்டே
என் முகத்தை வாசிக்கும்
உன் ஓரக்கண்களில்,
எதற்காகவோ 
பிடிக்காமல் காணாது போன
உன் தகப்பனை நினைத்து
நான் வடித்தக்கண்ணீர்
நீ யுண்டப் பாலோடு கலந்ததை
எப்படி
உனக்கு அற்பமாய் தோன்றாமல் 
நினைவூட்டமுடியும்
நீ
போனதுபோல் திரும்பி விடாதே தம்பி

அண்ணனின்
மேல்நிலைக் கல்விக்கு
கடைசியாக
என் கயிறுக்குள்
தாலிமட்டும்தான் இருந்தது
உனக்குத் தெரியாததல்ல.
 
 
பக்கத்து வீடுகளிலும், எதிர்வீடுகளிலும்
கலர் கலரான ஆடைகளோடு
செல்லும் பிள்ளைகளை
நீ வெறித்துப் பார்க்கிறாய்
எனக்குத் தெரியாமல்  இல்லை.
 
ஐந்து வருட நம்பிக்கைக்கு பிறகு
கேஷ்க் கடை முதலாளி 
தொடர்ந்து வா கொஞ்சம் 
ஏத்தித்தருகிறேன்  என்றதை 
நம்பித்தான் 
துணிந்து 'இருபது' வட்டிக்கு வாங்கினேன்.

நாளை நீ பள்ளிக்குச்செல்லும்போது
அவர்களைப் போலவே
ஷுவும், டையும் உன்னை அலங்கரிக்கும்
பக்கத்து, எதிர் வீட்டின் தலைவி
அவள் பிள்ளைகளோடு 
நீ கைக்கோர்க்க அனுமதிப்பாள்
 
அவைகள் வெறும் பிரம்மைதான் தம்பி
எல்லாமும்
நான் இழந்துவிடாமல் இருக்க
பள்ளிக்கு போனதுபோலவே
திரும்பிவிடாதே தம்பி

ஜேடி   
  

    

         

No comments: