வாழ் குகை
கவிழ்ந்த
வெள்ளைப் பானையின்
விகாரமான பிண்டத்தின்கீழ்
நடப்பதெல்லாம் விசித்திரமானது.
பூமியில் புதைந்து நிற்கும்
தோலுரிந்த மரம்
தன் வேரை
நீர் நிலைகளைத்தேடி
நீளச்செய்வதில்லை.
காற்று, மழை, வெயில்
பயன்பாடு, பயனற்றவை
என பிரித்து
தனக்கானதென்று எதையும்
சேர்த்து ,விலக்கிக்கொள்ளும்
பாசாங்கான வேலையை
ஒரு நாளும் செய்யவில்லை
பூமியின் வசீகரத்தில்
தன்னை உட்ப்படுத்திக் கொள்லாதவனைப்போலவே.
ஆனால் எதோ ஒரு ஊன்று கோளோடு திரிகிறான்
ஆனால் எதோ ஒரு ஊன்று கோளோடு திரிகிறான்
வெள்ளாடு கூட்டத்தை
கோலால் துரத்தும்
மேய்ப்பன்போல்
காற்று மேகத்தை ஒருமுகமாக
துரத்திச்செல்கிறது
மேகமும்
நடை பயிலும்
ஒரு பிஞ்சிக்குழந்தையின் பயணம் போல நகர்கிறது.
அது
என் வாயில் ஊதும் காற்றால் நடக்கிறது
வானவில்லே நான் போட்டதுதான்
என மார்த்தட்டித் திரிந்தவன்
சாலையில் நடக்கும்போது
எதேச்சியாக ஒரு சின்ன கல்தான் தடுக்கிவிட்டது
மூளையின் நூளிழைக்கோலாறு
விற்கப்படாத பொருளாக, ஒரு நாள் கடந்தால்
அழுகிவிடும் தன்மையிலும்
வியாபாரியின் கடைக் கூடையில் இருக்கிறான்
இதுவோ வாழ் குகை
..........................
ஜே டி
No comments:
Post a Comment