Saturday, June 18, 2011

சினிமா

                              அவன்-இவன் 

      சாமான்யனைக் கொல்லும் பாலா

பாலாவின் படங்களை ரிலீசான வாரத்திலேயே தற்செயலாகப் பார்த்து விடும்படியாக அமைந்து விடுகிறது. அப்படித்தான் நண்பரின் அழைப்பின் பேரில் அவன்-இவன்  பார்க்க நேர்ந்தது. டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது, மார்பின் நேர்க்கோட்டில் இருந்த சூரியனின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாற்பது  வாலிபர்களுக்குப் பிறகு  நின்றிருந்தேன்.  முன்று மணிக்கு நின்ற நான் முன்று இருபத்தைந்துக்கு டிக்கட் வாங்கினேன். ஏறக்குறைய முப்பது நிமிட வரிசையின் காத்திருப்பில், பெண் வருசையில்  ஐந்து, ஆறு பெண்கள்தான் இருந்தனர். இளைஞர்கள் வருகை அதிகமானது. பொதுவாக அதில் பள்ளி, கல்லுரி  மாணவர்களும் அடக்கம். பாலாவின் படத்துக்கு இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களே, அவர்களின் எதிர்கால வாழ்வின் முறைக்கு பாலா காட்டுகின்ற வழி என்ன? இப்படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வியோடு படத்திற்கு வருகிறேன்.

தொடக்கத்திலிருந்தே கதையோட்டமில்லாமல் வெறும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட காட்சியாய் தொடர்ந்து நகர்கிறது. கதை  எந்தப் பகுதியில் நடக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, படத்தில் அறிந்துகொள்ள முடியவில்லை. 1919 - 1920 களின் பகுதியில் ஆங்கிலேயர்கள் வந்து தங்கள் பகுதியில் வசித்த மக்களை குற்றப்பரம்பரையாக அறிவித்து, ஒரு இழிவான வாழ்வு முறைய  அவர்களின் பால் கட்டமைத்தது. அவன்-இவன் அக்கால வாழ்வு முறைகளில் ஒன்றை தற்போது வெளிப்படுத்திக்காட்டுவது போன்று உள்ளது.  

அக்காலக்கருவை எடுத்திருந்தாலும் மனிதனின் வாழ்வுமுறை அத்தன் மையை எட்டுவதற்கு என்ன காரணம்? சமூகத்தில் அதற்கான குறைபாட்டுக்கு தீர்வு என்ன? என்பதை பாலா கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஒரு பின்நவீனத்துவத்தை போல் ஒரு முழுமையை துக்கள் துக்களாக கிழித்துப் போட்டு, மீண்டும் ஒரு முழுமையைக்கான ஒழுங்கமைத்தும்  எதோ ஒரு முழுமையைக்கூட கதையில்  காணமுடியவில்லை.  

சமூகம் என்பது பொதுப்படையாக உன்னதத்தன்மை வாய்ந்தது. என்று கற்பித்து வைத்திருக்கிறது. அது பெரும்பாலும் வாழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறவர் களிடத்திலேயே பெருமைக்குரியதாய். போற்றப்பட வேண்டியதாய் போதிக்கப்படுகிறது. பேசவைக்கப்படுகிறது. ஆட்சியாளர் களோ,  பணமுதலாளிகளோ மயிரளவேனும் மதிப்பதில்லை. 

படத்தில்  ஒரு கணவன்,  அவருக்கு இரண்டு மனைவிகள் அவர்களுக்கு தலா ஒரு விஷால்-ஆர்யா ஆண்பிள்ளைகள். எலி பொந்துகள் போல் பக்கத்து பக்கத்து (வீடுகள்  அல்லை ) அறைகள். அதில் சில நேரம் சண்டை,  (முடியைப் பிய்த்துக் கொள்வதே இல்லை)  சிலநேரம் கொஞ்சல் ( பக்கத்து  கோயிலுக்கு கூட ஒன்றாகப் போனதில்லை)  தாய்களே பிள்ளைகளை திருடவும், கொள்ளை இடவும், குடிக்கவும் தூண்டுகிறவர்களாக இருக்கிறார்கள்.

சமூகத்தில்  நலிந்தவர் மத்தியில் எவைஎல்லாம் நீதிக்கு எதிரானவைகள் என்று பாடமாக்கப் படுகிறதோ, அவைகளை எல்லாம் தங்களுடைய வீரியமிக்க நீதியின் செயல்பாடுகலாய் கடைபிடிப்போம். என்று ஆணித்தரமாய் சொல்லுகிற தைரியம் பாலாவுக்கு நிறையவே இருக்கிறது.

பாலா விளிம்பு நிலை மக்கள் ஏன் ஒழுங்கிற்கு கட்டுப்படவேண்டும் என்ற கேள்வியை வைத்தால். அவர் படத்தில் காட்டுவதுபோல், கொமாளிகலாய் தங்களை காட்டிக்கொண்டு   மாட்டிரட்ச்சிகாரனை வெறித்தனமாய்  கொன்று விட்டு ஜாலியாக பாட்டுப்பாடிக்கொண்டு போவதுபோல், ஒரு சாமான்யன் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியுமா? விளிம்பு நிலை மக்களுக்கு இப்படியான மோசமான செயல்பாடுகளின் முலமாக ஆசைக்காட்டுதல்,  பணமுதலாளி களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ மறைமுகமாக அடிமையாக்க ஒப்பந்தம் செய்வதாகவே அர்த்தம்.

ஒரு திருட்டுக்குடும்பத்தோடு  ஜெமிந்தார் பரம்பரையில் வந்தவர் தொடர்ந்து நட்ப்பு ரீதியில் உறவு வைத்திருக்கிறார்.  கதையில் தேவையில்லாமல் உள் நுழைவாய் வரும் வெள்ளையர்களை,  ஜி.எம்.குமார் மலைகளை சுற்றிப் பார்க்க அழைத்து வருகிறார். வழியில் கண்காணிப்பு கேட்முடப் பட்டிருக்கிறது, பாரஸ்ட் அதிகாரியிடம் கேட்டைத்திறக்கும்படி கேட்கிறார். பாரஸ்ட் அதிகாரி முறையான அனுமதி பெற்றுள்ளீர்களா என்கிறார்.  ஜி.எம்.குமார் தன் பெருமையைக் காட்ட  அதிகாரியிடம் சற்று முரட்டுத்தனமாக பேசுகிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சுற்றுளா இடத்தை பார்க்காமலே  திரும்பிவிடுகிறார். 

 அதற்கு பழிவாங்கும்படி  விஷால் - ஆர்யாவை ஏவிவிடுகிறார்.  அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட கடமையை நியாயமாக நிறைவேற்றியதற்காக, சாதாரண மனக்கசப்பின் செயலுக்கு,  ஒரு நாட்டின் நிலப்பகுதியை அபகரிக்க வந்ததுபோல் பாரஸ்ட் அதிகாரியை அடித்து துவம்சம் செய்கிறார்கள். கோடி ரூபா   மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை விஷால் கடத்திச்செல்கிறாரா? அல்லது உயிரை காப்பாற்றிக்கொள்ள வாகனத்தை எடுத்துச்செல்கிறாரா? எந்த தகவலும் இல்லை. இருந்தும்  அதற்காக அதிகாரிகள் பதட்டப்படுவதெல்லாம் வெறும் காட்சிக்காகவே இருக்கிறது?

முக்கியமாக ஒன்றே ஒன்று சொல்லவேண்டும் என்பதற்காகவே இப்படம் முழுக்க எல்லா நடிகர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கிறார். மாட்டிரட்சிக்காக மாட்டை விற்கிறவர்கள் எல்லாம் கொல்லப்படவேண்டும். இது ஒன்றுதான் படத்தின் ஆணிவேர். அரசுக்கு எதிராக ஒருகோடி மதிப்புடைய பொருளை கொள்ளையடிப்பவன் பரவாஇல்லை விட்டுவிடலாம். மாட்டைக் கொல்லுகிறவனை  ஈவு இறக்கமில்லால்  கொன்றுவிடலாம். இதுதான் பாலாவின் அவன்- இவன்.

பாலா அறப்புக்கு வருகின்ற மாடுகளின் நிகழ்கால வாழ்வை ஒரு நாளும் கவனித்தவராக இருந்திருக்கமாட்டார். மாட்டை அறுக்கின்ற இடத்தையும்  அவ்வளவாக   அறிந்திருக்க மாட்டார்  என்பது  அவர் அமைத்திருக்கும் மாட்டு கொட்டடியிளிருந்து தெரிகிறது. ஏனென்றால்  கொட்டடிகளில் உள்ள மாடுகள் எல்லாமே நூற்றுக்கு நூறு   கொழு, கொழு வென்று எருதுகளாகவோ, பசுக்களாகவோதான்  இருக்கிறது.

அறப்புக்கு வருகின்ற மாடுகள் தொண்ணுறு விழுக்காடு மாடுகள் தங்கள் வாழ்வில் இனி மனிதனுக்கு எந்த பலனும் இல்லை என்று ஒதுக்கப்பட்டபிறகே வருகிறது. பாசமாய் வளர்க்கின்ற பசு, பல கன்றுகளை ஈன்று  இனி அது கன்று  ஈனாது எனும் நிலை வரும்போது, இது வரை உழைத்த உழைப்புக்கு மரியாதை தந்து, உரிமையாளர்கள் அதை புத்துவிடுவது இல்லை. அதன் மூலமாக கடைசியாக எதோ ஒரு தொகை கிடைக்கட்டும் என்று அறப்புக்கு விற்றுவிடுகிறார்கள். விவசாயியும் அப்படியே செய்கிறான். பாலா மூளைக்கு எஸ். ராமகிருஷ்ணன்   வசனமாக சொல்லுவதுபோல் முதலில் மாட்டிரட்ச்சி சாப்பிடுகிற வனுக்கு தண்டனை குடுடா. என்பதாலோ, விபாரம் செய்கிறவனை துடிக்க துடிக்க கொல்லுவதாலோ சமுகத்தின் ஒழுங்கு வந்துவிடாது. ஒரு குழந்தை, தொழிலாளியாக மாறுகிறதென்றால் யார் முதல் குற்றவாளி? வேலை தருகின்றவனா? அந்த தகப்பனைத்தான்  முதலில் உதைக்கவேண்டும். அதைவிட்டு வியாபாரியை கொல்லுவது என்ன நியாயம்.

இப்படத்தில் பாலாவுக்கு பயந்து எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறாகள். அனால் பாலா மாட்டிரட்சிக்காரனை கொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்தை தன் மூளையில் ஆழமாய் பதித்து வைத்ததால்  ஒரு கதையை உருவாக்குவதில் கோட்டை விட்டுவிட்டார். இதைவிட சமூகத்தை சீரழிக்கிற குறைபாடுகள் எங்கும், எதிலும் இல்லையா?  கோழி சப்பிடுவோரை, ஆடு சாப்பிடுவோரை என்னசெய்வது?

விஷாலும், ஆர்யாவும் போட்டியில்லாமல் அவரவர் இயல்புக்கு முழு திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். விஷால் பெண்தன்மை, திருடும் நேரம் செண்டிமேன்ட்டுக்காக கொல்லையிடாமல் செல்லுவது. மேடையில் நடிப்புத்துறையின் பல பரிணாமங்களை நடிப்பில் காட்டுவது. சிலநேரம் கொமாளியைப்போல் மாறிவிடுவது, கண்ணையும், முகபாவத்தையும் மாற்றுவது என்று எல்லா இடங்களிலும்  சிறந்த நடிப்பை விஷால் வெளிப்படுத்தியுள்ளார். ஆர்யாவும் முரட்டுத்தனம் வெளியிலும்,  மனதளவில் சாதுவாகவும் போக்கிரித்தனம் இல்லாமலும்  மிகவும் சிறப்பாக செய்துள்ளார். ஜி.எம். குமார் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவாக முடித்துள்ளார். சின்ன பையனை  பேசவிட்டே கெடுத்துவிட்டார்கள். பெண்பாத்திரங்களில் அம்பிகா உள்பட தாய் நடிப்பு சிறப்புக்குரியது. நாயகிகளுக்கு உணர்வுப்பூர் வமான காட்ச்சிகளே இல்லை.


நா.முத்துக்குமாரின் பாடல்களை முழுமையாக கேட்கவிடாமல் இடையி டையில் குறுக்கீடு செய்து என்ன பாடல் என்பதையே கேட்கவிடாமல் செய்துவிட்டார்கள். யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை கேட்கும்படியாகவே இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன் வசனம் காட்சிளில்  ஒன்றும்படியாக  இருக்கிறது. அப்படி யதார்த்தமாகன  வசனம் இல்லை என்றால் படத்தை பார்க்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இருந்தாலு ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்ன கதை என்பதை ஒரு முறையாவது படித்துவிட்டு வசனம் எழுதவேண்டும். இயக்குனரின் ஓட்டத்திற்கு பின்னாடியே வார்த்தைகளை கொட்டிச்செல்லுவது பொறுப்புள்ளவர்களின் பணியாகாது. வில்லன் மூலமாக மாட்டிரட்சியை சாபபிடுகிறவனையும், குர்பானிக்கு ஒட்டகத்தை வெட்டுகிறவனையும் சம்பந்தப்படுத்தி வசனம் எழுதுவது நல்ல எழுத்தாளன் பிம்பத்தை தகர்க்கும்.

முடிவாக அவன்-இவன் இளைஞர்களின் எதோ ஒரு மூலையில் ஒட்டியிருக்கும் நேர்மையான் எண்ணங்களை சீரழிக்கப்பபயன் படுவதாகவும். ஒரு சாமான்யனை  கொல்லுவதிலே  பாலா துடிப்பு மிக்கவராய் இருக்கிறார் என்பதையுமே இப்படம் சொல்லுகிறது. 

ஜே டி   
            

No comments: