கரும்புள்ளி
தமிழர் முதல் சமணர் பாறை வெடி வைத்து தகற்கப்பட்டு காணாமல் போகிறது. தொல்லியல் துறை கண்டுகொள்ள வில்லை. திணமலர் செய்தி. மனோன்மணி முகப்புத்தகத்தில் ஒருவரின் கமெண்ட் ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில் இது சார்ந்த செய்தி படித்ததுபோல் நாபகம்‘. என்று கூறுகிறார்.
ஆக வசதிபடைத்த தனியாள், தங்கள் எதிர்கால சந்ததிகளின் நோய்ப்பாதுகாப்புக்காக, பூமியிலிருக்கும் எந்த செல்வங்களையும், எந்த மனிதர்களின் உழைப்பையும் வதம் செய்து பறித்துக்கொள்ள அரசியல் வாதிகளின் குழந்தை மனசு காலங் காலமாகத் துணையிருக்கிறது.
கொள்ளையர்கள், சப்பிவிட்டு நரம்புத்தசையுடன் கூடிய எலும்பைப் போடுகிறார்கள். அதை, அரசியல் வாதிகள், அதிகாரிகள் தங்கள் பரம்பரை சொத்தான வெள்ளித்தட்டுகளில் வாங்கிப் பதப்படுத்துகிறார்கள்.
பீகாரிலும், கர்நாடகாவிலும் குறைந்த பட்சம் சிறையில் அடைக்கிறார்கள், கைது செய்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல்வாதிக்கும், அந்தப் புணிதப்பயணம் கிடைக்கவேயில்லை. என்ன காரணம் என்றால் தழிழகத்தில் ஆட்சியாளர்களும், கட்சியாளர்களும் எப்போதுமே இளகிய மனசும், நாகரீக செயலும் உடையவர்களாம். ஆனால், அநேகமாக இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிகமாக கட்சிக்குள்ளிருந்து, கட்சி. கொள்கைக்குள்ளிருந்து, கொள்கை என்று சாதிவாரியாக. மத வாரியாக. உணர்வு வாரியாக, (உட்கட்சி பூசலாக) மொழிவாரியாக நாளுக்கு நாள் கட்சிகளும், கொள்கைகளும் குட்டி போட்டுக்கொண்டே இருக்கிறது.
குட்டிகள் வளர வளர தமிழக பொதுமக்களின் கல்லா பெட்டிகள், முட்டை மந்திரமாக காணாமல்போகிறது. மக்களின் இல்லங்கள் வெறுமனையாகும் நிலை வரும்போது கொள்ளையர்கள் இயற்கை வளங்களை நோக்கி போர் தொடுக்கிறார்கள். தொடர்ந்து போர் தொடுப்போருக்கு கட்டளைக்காரணியாக ஆட்சியாளர்களும், வழி நடத்தும் தளபதிகளாக பல அதிகாரிகளும் தொடர்ந்து இருப்பதால். தேசியக்கொள்கையாக பெரிய அளவில் வளங்களும், பிட்பாக்கட் தன்மையாக, தனி வீட்டில் எண்பது வயதுக்கிழவி கற்பழிக்கப்படுவதும். கண்ணாமூச்சி விளையாட்டுபோல நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலைசெய்வதும். எல்லாமே தொடர்ந்து நடக்கின்றது.
கட்சி நடத்த, குடும்பம் நடத்த பணப்பேயை தேவதையாக எண்ணும்வரை இந்திலை மாற வாய்ப்பே இல்லை. குறைந்த பட்சம் கிடைத்தது போதும் என்றும், அல்லது மேற்கொண்டு எண்ணுவது அடிப்படையில் நியாயமான எண்ணமாக இருப்பது அவசியம். அத்தன்மை இல்லாதபோது, தமிழனுக்கு மட்டுமல்ல மானிடத்திற்கே மிகப்பெரும் கரும்புள்ளி.
ஜேடி
No comments:
Post a Comment