Sunday, May 15, 2011

கவிதை

   சிசு கொலையில் அவன் பெயர் எழுது.


நான்  பாசாங்கு இல்லாமல்தான் நேசித்தேன்
பொருள் படைத்த உன் தந்தையால் 
எளிதில் நம் காதலை முறியடிக்க முடிந்தது.

குடும்பத்திற்கு அடக்கமான பிள்ளையாய் 
சீக்கிரத்தில் மாறிவிட்டாய்.

உன் மனைவி வந்தபிறகுதான் 
எனக்கே விளங்கியது
எந்த ஆண்மகனும் 
அவளின் பெருத்த முலைகளுக்கு 
அடிமையாகத்தான் செய்வார்கள் என்று .

நான் மனக்கசப்புடந்தான்
சிலநாட்கள் தவித்தேன் 
குடும்பத்தில் மிஞ்சியிருக்கும் 
என் தாயாலும், என்னாலும் என்னதான் செய்யமுடியும். 
என்னக்காக நானே 
எந்த மாப்பிள்ளை தகப்பனிடம் பேசமுடியும் 
கலாத்தை என் வழிக்கு முடக்கமுடியாததால்
அதன் வழிக்கு பயணப்படத்தான் 
கம்பெனிகளுக்குள் என்னை நுழைத்தேன்.  

மீண்டும் ஏனோ என்
முந்தானையை நெருங்கினாய் 
அப்போதே கேட்டேன் இல்லையா 
ஏன் உன் மனைவியின் முலைகள்
எவ்வளவு பிசந்தாலும் கரைவதே இல்லையா?
அதை நிர்வகிப்பதில் உனக்கு சிரமம் வந்துவிட்டதா?

எதற்காக என் குருத்து முலைகளின் மீது 
திடீரென ஈர்ப்பு வந்தது.

நான் சொல்லுவது கூட தவறுதான்.
காதலில் தள்ளாடிய 
கடந்த காலத்திற்கு வேண்டுமென்றால் 
மேல் குறிப்பிட்ட வாசகம் பொருந்தும்.

உடலோடு கரைந்து  
காணாமல் போக காத்திருக்கும்
தற்போதைய என் முலைகள் 
உனக்கு எந்த சுவாரசியமும் தராது
இதை பலமுறை உன்னிடம் சொல்லியும் 
மண்டிக்கிடக்கும் தும்பைச்செடிகளை 
சுத்தப்படுத்துவதாக 
யோனியில் படர்ந்த கருமையை ஒதுக்கி சுவைத்தாய்.

இதுவரை கிணற்றுக்குள் கல்லாயிருந்த நான் 
எதயோதேட, எதோ வந்ததுபோல் 
தற்போது காற்றும் என்னை தழுவிச்சென்றது
இப்போது இதற்காகதான் இவ்வளவுநாள் 
ஏங்கியும் இருக்கிறேன் என அறிகிறேன் 
இருந்தாலும் உள்ளுர ஏனோ வெறுமை
அதனால் கண்களை இருக மூடிக்கொண்டேன்.

நீயாகவே
வேகமாக ஆடைகளை களைந்து விட்டாய் 
சில நாழிகை
நீ உலகை மறந்து மிதக்கின்றாய் 
பல நிமிட தூண்டுதலில்
சில நேரம் நானும் மெய் மறந்து 
தரையில் அறையப்பட்டுக்கிடக்கிறேன்
இருவர் கஷ்ட்டப்படுதளிலும் 
ஒரு நீதியை கண்டுபிடித்து வைத்திருந்தேன். 

நீ எனக்குள் ஏற்றுமதி செய்த 
அணுக்கள் உயிர் பெற்று நெளிகிறது 
இதை முதலில் 
உன்னிடம்தான் வார்த்தைகளால் வெளிப்படுத்தினேன்.

உடனே 
நான் போர் குற்றமே செய்யவே இல்லை 
என சாதிக்கின்றாய்.

எல்லா ஆண்களுக்கும் கடவுள் 
இரண்டு விதைபையை வைத்திருக்கிறான் 
ஆண்குழைந்தகளிடம் கண்டிருக்கிறேன் 

உனக்கு ஒத்தை விதைப்பைதான். மேலும் 
காமத்தின் பாதிப்பு ஏற்படாத போது
நேராக தோற்றமளிக்கும் உன் குறி 
என் அம்மணத்தை பார்த்தமாத்திரத்தில் 
ஒரு தொரட்டு கத்தியைப்போல் 
வளைந்துவிடும் 

இதை உன்னோடு கலவிகொண்டதற்கு 
சாட்சியாக வைக்க நினைக்கிறேன் 
அப்போது உண்மை சொல்லுகிறாள் என்று 
ஏற்றுக்கொள்வாயா?   

நீ இக்கருவுக்கு சொந்தமில்லை 
என உறுதியாக மறுக்கும் பட்சத்தில் 
என் இடது கையை கொண்டு 
உன் எலிக்குட்டி கருவை 
தலை நசுக்கி எறிந்துவிட்டு
அங்கிகாரம் பெற்று 
யாரையும் சுமக்கவோ அல்லது 
நடைபிணமாகி மீண்டும் 
கம்பெனிகளை நாடுவதோ தொடங்கிவிடுவேன்.

அனால் பரிதாபமான சிசுகொலையின் காரணியாக 
உன் பெயரைத்தான் பரிந்துரைப்பேன்.


ஜே.டேனியல்   
 

No comments: