என் மனைவி அடிமையாக்குகிறாள்
ஒருமுறைக்கூட
அவளாக அழைக்கவேமாட்டாள்
தானாக இழுப்பாள்
கதவுகளைத்திறந்து
ரகசியங்களை செலுத்தவேண்டும்.
எத்தனை திறமைசாளி
அவள் வெளிப்படித்தும் விஷயங்கள்
உலகத்தில் யாராலும் செய்யவேமுடியாது.
அவள் மேடு பள்ளங்களைக் கடந்தும்
தன் மேனியில்
வளரும் தன்மை கொண்ட
அத்தனையும் அழகுதான்.
கற்பனைகெட்டாத
அர்த்தங்கள் அவளிடத்தில் இருக்கிறது.
மூர்க்கமுடன் தொடும்போது
அவளைவிட அசிங்கம் பிடித்தவள்
இருக்கவேமுடியாது.
உறவுகளின்
உணர்வுக்கேற்றபடி நடந்துகொள்கிறாள்.
தன்னிடம்
இருக்கும் நேரம் தவிர்த்து
எஞ்சிய நேரத்தையும் வேற்றாளிடம்
விடமனசு வருவதேயில்லை.
அவள் உடலில் பாயும்
சிறிய உபாதையை
தாங்கவே மாட்டாள்
செத்தவள் போல் கிடப்பாள்.
நானாக விரும்பி மணந்ததால்
பிரியமுடியவில்லை
இத்தனை ஆளுமைகொண்டவளிடம்
என் ஆண் ஆளுமை
எடுபடவேயில்லை.
அதற்காக எப்போதும்
எச்சரிக்கையாகவே இருக்கிறேன்
எனக்கான அவமானங்களை இழக்காமல்
நான் மனைவியாகக்கருதும்
'இன்டர்நெட்'டுடன்.
1 comment:
நன்று.
Post a Comment