Thursday, July 19, 2012

கவிதை


தனிமையானவரைச் சுற்றியிருக்கும்
மூன்று குடும்பங்கள்.

வெள்ளிக்கிழமை இரவுகேவிக் கேவி
இறந்த மூதாட்டியை
சனியன்று மாலை
யாரோ கண்டெடுக்கிறார்கள்
இத்தனைக்கும் மூதாட்டி
வாசல் திறந்தேப் படுத்திருக்கிறாள்
நீ
எப்போதும் எதிர்
வீட்டுக்காரனாகவே இருக்கின்றாய்.


சட்டம் இல்லை
ஆக, ஏன் விசாரிக்கனும்
வாதமாய் வைக்காதே
உறவற்ற மனிதர்
பக்கத்தில் தனியாய் இருத்தலை
விசாரிக்காத உன்னை,
சுற்றத்தாரை 
புதியச் சட்டங்களால்
தண்டிக்க
அதிகம் நேரம் பிடிக்காது

சாக்கும்  சொல்ல 
நீயாக உரிமை கோருகிறாய்
காலையில் முகம் கழுவ
சோப்பைக் கண்டெடுப்பதுபோல்
வீட்டு வாசலில் விட்ட
செருப்பைக் கவனிப்பதுபோல்
உங்களை வாழ்வித்துக்கொண்டே
அவர்களின்
மௌனமானத் தகவுகளை
சேகரிக்க மறந்துவிடுகிறீர்கள்.

குறைந்தது
மூன்று குடும்பம்தான்
பொறுப்பாளி
தனிமை வாசிக்கு
பக்கத்து வாசியாய் இருப்பதால்

உறவற்றவர்
எங்களிடம் சங்கடப்படுகிறார்
என்பதை கணக்கில் கொள்ள முடியாது
மூன்று குடும்பம்
எதை வைத்தாவது
ஒழுங்கமைத்துக்கொள்ளுங்கள்
அவர்
உங்கள் தொடர்பில் இருப்பதை.

குறைந்த பட்சம்
உறவற்ற நம்மை
இச்சமூகம் கவனிக்கிறது என்ற
நிம்மதியுடனாவது போக
உங்கள் விசாரிப்பை
அன்புடையதாக்கு

உறவற்றவர்க்கு
பணப்பாதுகாப்பைத்தர
நிர்பந்திக்கவில்லை
அவர்களால் முடியாத பட்சத்தில்
குறைந்தது
அரசின் இலவச முகாம்களையாவது,
ஆபத்தைத் தடுக்கும்  எச்சரிக்கையாவது
கண்டடையச்செய்து
கடுமையான புதிய
சட்ட தண்டனையிலிருந்து
தப்பிக்கொள்ளுங்கள்

தனிமையானவரைச் சுற்றியிருக்கும்
மூன்று குடும்பங்கள்.

ஜே.டி

 .



No comments: