Thursday, March 3, 2011

பாடும் பறவை- 2

காமத்தில் துரத்தும் கூட்டு நாய்களுடன் ஒரு நாயாக வருகிறான். காதலுடன், எந்த உறவையும் மறுக்கிறான். மேல் பாரம் முற்றிலும் குறைந்த என்னிடம்.

அறைமூடி உறங்கியும் பொறுப்புள்ள ஆண்மாக்கள் வெளிஉலகின் எல்லை கடந்த பிம்பங்களை தரிசிக்கிறது. வெளிச்சிதறல்களை கிரகித்து உலவும் பிம்பம்.

கைவிடுதலை சகித்து வாலியில் விழும், குழாயில் கசியும் சொட்டுநீர். புதிய செயல்கான வீரியமுடன் முன்னோரில் கலக்கிறது. மனிதனுக்கு வழிகாட்டியாய்.


மெளனமான இரவின் ஒத்தை அறையில் இடைவெளி துறந்து புழங்காத தம்பதிகள் கூட்டு வாழ்வின் விலகளை வளர்பிரையாய் தொடர்ந்து, கடந்து முடிவை எட்டுகிறார்கள்.

நிர்பந்தங்கள் பிணைக்கப்பட்ட உறவில் நியாயமான உண்மை கடைபிடித்தல். வெள்ளிக்கனிமம் இலையில் பூத்த மலைகளின் மரங்கள்போல் சொர்கம்தான்.

பல்தேய்க்கவும், காலைகடன் முடிக்கவும் சொல்லிக் கொடுத்தே தலைவலிக்கிறது.  என்பதைக்கடந்து குழந்தையான தாத்தாவுக்கு

ஊழலை கடைபிடிக்கிற அதிகாரி, தன் விசுவாசியை ஊழளுக்கு ஊக்குவிக் கிறான். பூமிவாய்பிளந்து காத்திருக்கிறது இருவர் காலடியில்.

உயிர் அசாதாரமானது அதன் கூட்டிலிருந்து வெளியேராமல் இருக்கும் வரை.

தண்ணீர் எப்போதும் மயக்கம் தருவதாகவே இருக்கிறது.கடலாய் பார்வக்கும், கால் அளவாய் மூளைக்கும்.


சிவப்பும்,மஞ்சல்,நீலம் கலந்து பாலைவன திட்டுகள் சாயலை பூசிக்கொண்டது உறங்கச்செல்லும் வானம்.

தன்னிலிருந்து வீரியமிக்க கன்றுகளை பிறப்பிக்கிறான் தீங்கறியா நல்மனிதன்.
எந்த அதிகாரத்தின் காலையும் நக்கிக்கொண்டே கிடப்பான் நல்ல கொலைகாரன்.

பல்லறுந்த பொக்கை ராட்ச்சசி சரசமாடும் பார்வையைத்தேக்கி படிக்கும் நேரத்தை இழுக்கிறாள் கணினிப்பெயரில்

நீரை விழுங்கியிருக்கும் காற்று  காமத்தை தூண்டுவதேயில்லை. இருந்தாலும் தொடர்கிறேன் காற்றை, வாழ்வைப்போல

துளிர்விடுகின்ற கொழுந்துகள் வீரியமில்லாதது.அதுதான் விருட்ச்சம் பெருக்க துணைபுரிகிறது.

காதல் வரும்பொழுது நாங்கள் இருவர் மட்டுமே உலகம். காதல் அழிந்த பின்னும நிலைத்து வாழ்ந்தவர்க்கு மட்டுமே உலகம்.

உணர்வுகளே உறங்கிவிடாதே, சுவாசிக்ககின்ற வார்த்தைகள் உன் கண்கள் பிறப்பிக்கட்டும்.

No comments: