Friday, March 18, 2011

கவிதை



         அழகு


கேரள பியூர் ஒயிட்டும் 
தமிழக ஹைவெரியும் 
குழத்த நிறத்தில்.

இளஞ் சூட்டின் தண்ணீரில்
ஆப்ட்டிக்கா சேர்த்த
நேற்றைய குளியலில்
இடுப்புக்கு கீழே
விடியா இரவை மொத்தமும் கூந்தலாக்கி.

முற்றிய தேங்காயில்  
கசக்கிய எண்ணையை
வெட்டியில் முழ்கி
மயிர் தொங்கு வாக்கிலேயே தடவி
பின்னி சுருட்டிய சின்ன கொண்டை
ஒரு கருப்பு ரோஜாவாய் நிற்க.

உடுத்தும் ஆடைதவிர்த்து
தொடாத பாவையாய்
தான் மட்டுமே
தன்னை தொட்டு நிர்வகித்துக்கொள்ளும்
மெழுகில் இழைத்த முகத்துடன்
அம்மணமாய் நிற்கும் நீண்ட கழுத்து

குதிங்கால் உயர்ந்த  அணியில்
சின்ன தூரம் எட்டும் நடையில்
சடக்கு சடக்கு அவள் நடக்கும்போது
சிறகு இல்லா பூமி தேவதையாய்
பறக்க விடுகிறாள் வாலிப மனசை.
 
 

No comments: