Wednesday, March 9, 2011

கவிதை

                              வீழ்ச்சி

பிறப்பரியாமல் 
வீ ரியமுடன் திரிகின்றாய்  
உன்னை அடையாத நபர் 
சோதனைக்குட்ப்படுத்தும் படியான
சோதனைக்கு ஆளாகிறான்.

வர்ணாசிரம பேதம் 
உன்னை படைத்தவனுக்கு
அருளத்தெரியவில்லை.

நீ யாரையும் 
அதிர்ச்சியுடனும்,பயத்துடனும் 
சிலரிடம் கொஞ்சிக்கொண்டும் 
ஒட்டிக்கொள்கிராய்.

பெருமுதலாளிகளையும்
முள் வேலிகளை பயிரிடும் 
ஆட்சியாளர்களையும் கண்டு
ஒதுங்கி தூரமாகிராய்.
 
உன்னை கண்டபோழுதில் 
மனிதனாய் 
ஜனனம் பெற்ற யாருக்கும் 
மனமகிழ்வு உண்டாகிறதில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் 
உன்னால் அடக்க முடிகிறதென்றால்
நீதான் 
இவ்வுலகின்  கடவுள்.

நின் ஆளுமையில் 
எல்லையில்லா மணற்பரப்பை கடந்து
எழுந்து நிற்கும்  உனக்கு
கடைகோடியாய் நிற்கும் 
நான்
உனக்கு இடும் பெயர்
பொருளாதார வீழ்ச்சி. 
 

                                             ஜே.டேனியல்