Saturday, March 12, 2011

சுனாமியின் தூதர்கள்

                          கவிதை

யார் 
உன் ஆழத்தின் நீளத்தைக் குறித்து
கேள்வி எழுப்பினார்கள்
அலையாய் வானுயர்ந்து 
உன் சக்த்தியை நிருபிக்கின்றாய். 

ஆயிரம் நுற்றாண்டை 
கடந்து வந்தபிறகே
எங்களால் 
எல்லாம் முடியுமென்று 
மார்த்தட்டினோம்.
நீங்கள் அரைநாள் போதும் 
உங்களை குப்பையாக்க
எனக் கொக்கரிக்கின்றீர்கள் 

காற்றும், கடலும், நிலமும், நெருப்பும்  
எங்கள் இனத்தை 
இல்லாமலாக்க நீங்களும் 
அவசரகால கூட்டனி வைக்கிறீர்களா?
   
இதுவரை இருந்ததை 
இனி முற்றிலும் இல்லாமல் செய்வதும் 
இதுவரை இல்லாததது 
இனி இருக்கப்போவதை 
ஆக்கிரமித்துக்கொள்ள விட்டுச்செல்வதும் தான் 
உங்கள் இறை பண்பாடா?.
இதை 
எங்கள் தலைவர்கள் 
முன்று வேலை உணவாக
கடைபிடிக்கிறார்களே!   

வருந்துகிறோம்  
உன் இரக்கமற்ற செயலுக்கு 
அடிக்கடி மீசை முறுக்கி
ஆனவரை சுருட்டிச்செல்வதேன்.
மொத்தமாய்
எங்கள் இனத்தையே அழித்துவிடு.
ரத்தமற்ற உடலுக்குள் 
சிந்தனையற்று,சதைமூடி
ஒரு புதிய படைப்பாய் 
வடித்துவிடு 
உம்மை மிஞ்சிவிடாமல்
உமக்கே
அடிமையாய் கிடக்கின்றோம். 

இவர்கள் யார் 
நாங்கள் சுட்டுத்தின்று 
இனம் அழிந்து 
தாங்க முடியாமல்
நகரத்தை விட்டு ஓடி 
மிஞ்சிக்கிடப்பவர்கள். 
இன்று 
கண்ணை மூடி,பெருங்குரலெடுத்து
சமமாக்க, மலையாய் உருண்டு வரும் 
உங்களுக்கு 
எங்கள் வாழிடங்களை 
காட்டிக்கொடுக்கிரார்களா?
சுனாமிக்கு முன்னால்
பறந்துவரும் பறவைகள்தான் 
உங்கள் தூதர்களா? 
 

No comments: