Wednesday, January 19, 2011

கவிதை

     நிகழ்வுகள்

கம்பிச்சக்கர வாகனத்தில்
வசதியற்ற பின்யிருக்கை
ஒற்றை ஸ்தனம்
கோழை போர் வீரனின்
கூர் ஈட்டியாய்
முதுகை பதம் பார்க்கும்

கடைக்கடையாய்
திரிந்து பூட்டிய
வளையல் கோர்த்த வலக்கை
சத்தமின்றி
வயிறை இறுக்கி  நழுவ
வீரியத்தின் கதவு திறக்கும்

தோலில் சாய்ந்து
கழுத்துப்பட்டையை நிரப்பிய
மல்லியின் வாசம்
மறையும் முன்
பிறப்பின் பயன்முடித்தேன்-என
மரணிக்கபிரியப்படும்

சாய்வு மலைகளின் குளிர்ச்சியில்
நீண்ட எல்லை கடக்க
இறுக்கமான தடைகள்
முட்டிக்  கடக்க
விருப்பத்துடன் கை கோர்க்கும்.

கிறுக்கி
தடங்கள் இன்றி மறையும்
மின்னல் கோடாய்
அறிமுகமில்லாதவர்களாக 
முகம் திருப்பி
நிகழ்வுகள் அழிய
வெட்கமில்லாமல் மறைகிறோம்
நீயும் நானும். 


நம்புழுதி 

No comments: