Thursday, January 13, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                      இழந்தாலும் மீட்ப்போம்
   
கம்பு, சோளம், கேழ்வரகு 
நவதானியங்கள்
மண்ணை அலங்கரித்த
பசுமைகானாது
பறவைகளின் மிஞ்சிய  இறகுகள்
தூசிபடிந்த மரங்களின் இலைக்ளிலும்
வண்ணம்பூசி
அளந்து நடப்பட்ட கல்லுகளின் மீதும்
எச்சமாய் ஒட்டிக்கிடக்கிறது.

இழந்ததெல்லாம் பழயன
என கழித்திடாது
புதிய வடிவம் கொடுத்து
அறிவிற்குகந்ததாய்
மீட்டுரு வாக்கம் கண்டு
வெற்றிபெருதலே
தமிழன் புத்தாண்டு
தழைக்கும் புத்தாண்டாய் மலரும்
அப்புத்தாண்டை நோக்கிப் பயணிப்போம்.

தமிழர்கள் அனைவருக்கும், மற்றும்   நம் சந்தோசத்தை ஆவளுடன் எதிர்நோக்கும் மனிதனாய் பாவிக்கும் யாருக்கும், எந்த நாட்டவருக்கும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நம் புழுதி

No comments: