Wednesday, May 8, 2013

கவிதை,



மழை

கணப்பொழுதில்
மின் விழுதை  
நெடுந்தொலைவுக்கு
பரப்பிச்செல்கிறது வானம்.

வானம்தொடாத மேகமும்
நிலவின் குளிர்ச்யை ருசித்துத்திரியும் காற்றும்
சாதிச்சண்டையின் ஓங்காரத்தோடு மோதி
முழக்கங்களை எழுப்புகின்றன

ஏனோத்தெரியவில்லை
நுனிப்புல்லில் பனிப்பூவை
தரிசிக்கமுடியவில்லை 

தார் பூசாத மணல் பூமியில்
பாதம்
பஞ்சு மிதித்ததை உணர்வைதில்லை

சாலையின் தண்ணீரை
விளையாட்டுக்குக்கூட சிதறடிக்க முடியவில்லை

கழனிக்காட்டில்,கால்வாயில், ஏரியில்
குரூரமானவன்
காய்ந்த சருகைக் கொளுத்தும்போது
கபடி வீரன்
எதிரியைத் துரத்தி அடிக்கப்பாய்வதுபோல்
மிஞ்சிய பசுமையும்
கருகி கரிக்கட்டையாகிறது

பூமியின் அரசியல் வாதிபோல்
நீலமும், வெண்மையும், மஞ்சளும்
மாறி மாறி வேடிக்கைக்காட்டும் வானமே
உன் பிறப்புறுபிலிருந்து
மூத்திரத்தையாவது பெய்தல் கூடாதா?
எங்கள் உச்சந்தலை
சிறிது குளிர்ச்சியை 
உணர்ந்து இளைப்பார.
ஜேடி

No comments: