Thursday, March 15, 2012

                                      

    கவிதை நூல்கள்

‘புது எழுத்து’ மனோன்மணி தற்போதையக் காலகட்டத்தில்  முன்னணி என்ற பெயரில்  இருக்கும் சிறுபத்திரிகைகளைவிட, எந்த வகையிலும் தரம் குறையாமல் நல்ல மொழிபெயர்ப்பபுகள், கதைகள், கவிதைகள் என்று சிறந்த முறையில் கடந்தப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனிமனிதனாக ‘புது எழுத்து’ இதழைக் கொண்டுவருகிறார்.

‘புது எழுத்து’ இதழ் மட்டுமல்ல. நல்லப் படைப்புகள் எதுவானாலும், எழுத்தாளர் பிரபலமானவராக இல்லாமல் இருந்தாலும்கூட அதைக் கணக்கில் எடுக்காமல், அவர்கள் எழுத்தின் மீது மட்டும் நம்பிக்கைவைத்துக்  கொண்டுவருகிறார். தற்போது அரசு கவிதைத்தொகுப்பை நிராகரிக்கிற நிலை தொடர்ந்து இருக்கிறது. (கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த நூல்களையுமே அரசு நூலகம் எடுப்பதில்லை. மிகச்சிறந்த கொள்கை. நாடு குட்டிச்சுவர் ஆகிறது என்பதற்கு இதுவும் அடையாளம்) பெரிய இலக்கிய நிறுவனங்களும் போட்ட முதல் எடுக்கமுடியாது என்று பயந்து ஒதுங்கிவிடுகின்றன. அந்த நிலையில்தான் மனோன்மணி ஒரேமுச்சில் தற்போதும் நான்கு படைப்பாளர்களுடையக் கவிதைத்தொகுதியை ‘புது எழுத்து’ வெளியீடாகக் கொண்டுவந்திருக்கிறார். 

நண்பர்கள் சுந்தர், சிவசங்கர்  புது எழுத்து வெளியீட்டின் புத்தகங்களை, என்னிடம் கொடுத்துள்ளார்கள். (நான்கு தொகுதியையும் முழுமையாகப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.)  இதற்கு முன்பு வெளியிட்ட றியாஸ குராணாவின் கவிதைத்தொகுதியின் முகவுரையை, றியாஸின் முகப்புத்தகத்தில்  இலக்கியத்தைக் கொல்பவனின்  சாட்சியம் என்றத் தலைப்பில் படித்தேன். அவர் சொல்லும் சில விஷயம் எனக்கும் ஏற்புடையதாக இருந்தது. மேலும் அதில் குறிப்பிட்ட கவிதையின் எடுத்துக்காட்டுக் கவிதைகளும் பிடித்திருந்தது.  அதனால் புது எழுத்தின் நான்கு கவிதைத் தொகுதியையும் காசு கொடுத்து வாங்கினேன்.

புது எழுத்தை  நான் அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சிறந்தப் பத்திரிக்கை என்ற விருதை பெற்றிருக்கிறது. இருந்தாலும் என்னிடம் விற்பனைக்கான  புத்தகங்கள் இருப்பதால்  விருப்பமுள்ளவர்கள் முப்பது விழுக்காடு கழிவுவிலையில் (புது எழுத்தின் நூல்கள்)  பெற்றுக்கொள்ள நேரும் என்கிற காரணத்துக்காக இங்கே பதிவிடுகிறேன். முப்பது விழுக்காடு தள்ளுபடி என்றவுடன் புத்தகத்தில் விஷயம் இருக்காது என்று நினைக்கவேண்டாம். நல்லப்படைப்புகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே  பதிப்பாளர் இதைத் தந்துதவுகிறார். விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் எந்த எண்களையும் அனுகலாம்.
   
தொகுதியின் பெயர் -  படைப்பாளர் பெயர் -  விலை

1. இஸ்ரேலியம்        -        பாம்பாட்டிச்சித்தன் - 70
2. குற்றத்தின் நறுமணம்-வெய்யில்                  - 70
3.நாவல் ஒன்றின்
  மூன்றாம் பதிப்பபு-         றியாஸ் குராணா    - 100
4.களம்- காலம்- ஆட்டம்- சபரிநாதன்                -  70     

 ஜே. டேனியல்- 9445726354.,  சிவ சங்கர்-9600922534.,  சுந்தர்- 7358061564.

ஜேடி

No comments: