Saturday, March 3, 2012

கவிதை


 












முற்றிய அறிவை 
முடக்கிவையுலகில்

நாணயத்தின் மதிப்பு
அறியாக் குழந்தை கடைக்குச்செல்கிறது
தனக்கு விருப்பமானதை
குழந்தை கைக்குள் திணிக்கிறான் கடைக்காரன்
தனக்கு விருப்பமானதாகவே இல்லை
இருந்தாலும், நீர் நிலையில் எச்சமிட்டுப் பறக்கும்
பறவையின் ஆவலை அடைந்து தீர்க்கிறது
அப்பாவிக் குழந்தை
முற்றிய அறிவு 
அச்செயலுக்காக மூச்சு வாங்கியதேயில்லை
இன்னும் சொன்னால், சமூகத்தில்
அதைத்தான் அழிவுக்குள்ளாகாமல்
ஆவணப்படுத்தியிருக்கிறது
முற்காலத்திலும், தற்காலத்திலும்
அன்பற்ற முற்றிய அறிவு.

இறைவா அன்பற்ற அறிவை
முடக்கிவை அல்லது மட்டுப்படுத்து, ஏனென்றால்,
காலம் முழுக்க
பல அடிமைகளை
தனக்கான மம்மிகளாகத் தகவமைத்து
பக்கபலமாய் வைத்துக்கொள்கிறது
அன்பற்ற முற்றிய அறிவு

அறிவு தன் எதிராளியை (எதிர் பதத்தை)
எப்போதும் நட்பாளராகவே
வைத்துக்கொள்ள விரும்புகிறது
தன் செயல் வீரியம் எள்ளலவும்
குறைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு
எஜமானியம், ஏகாதிபத்தியம் விட
ஆளுமையுள்ளது அறிவு. ஆனால்,
அதைவிட ஆபத்து நிறைந்தது
அன்பற்ற முற்றிய அறிவு

பிறரின் நிதர்சனமான
எந்த நியாயங்களையும்
பொய்யானக் கருத்தாய் உடைத்து, நிருபித்து.
தனது முற்றிய அறிவால்
தனக்கு ஏற்புடையதை
பொதுவான நியதியாக நிறுவிக்கொள்கிறது
ஒரு லட்சம் உயிரானாலும்
இயற்கை வளத்தை கையகப்படுத்துதலானாலும்
சிறிதாகக் கண்கலங்குவதும் இல்லை
பெரிதாக வருத்தப்படுவதுமில்லை
அன்பற்ற முற்றிய அறிவு

நான் வாழ்வதில்
அக்கறையிருந்தால் இறைவா
எனக்குள் ஓயாது இயங்கும்
அன்பற்ற முற்றிய அறிவை....

எமி

No comments: