Thursday, January 12, 2012

                                           இயற்கை

காற்று
தெருஓரம்தான்
மெல்ல நடத்கிறது
வழி தெரிந்தும்
டயர், பிளாஷ்டிக் எரியும்
என் வாசலை
புறக்கணித்துச் செல்கிறது

நான் இருசக்கரத்திலிருந்து
வெளியேற்றும்
கரும்புகைச்சலால் 
தினந்தோரும்
அழகு மிளிர
குளிர்மையுடன்
எழுந்து கொள்ளும்
வான்கொளுத்தி
உயர உயர வளரும்போது
என் கறுத்த மேனியைஉருக்கி விடும்படி 
எரிகணைகளை 
துப்பிக்கொண்டே போகிறது

குளங்ளில்
தங்கிய நீர்
தன் சுற்றதின்
கரைகளில் பூக்கும்
புல்பூண்டுகளை
செழுமையாக்கியது
இன்று
முடிந்தளவு அவைகளை
சேமிப்புக் கணக்கின்
எண்களால் நிறப்பிக்கொண்டதால்
என் சுயம் சார்ந்தவர்களோடு
நானும்தான்
நாவரண்டு
காணாமல்போகிறேன்.

இயற்கையின் தரிசனங்களை
இரகசியமாகவேணும்
தரிசிக்காதபோது
இயற்கை
வெறுமையாகவே
விட்டு விடுகிறது
நாம் நம்
சந்ததிக்கு
விட்டுச்செல்கிறது போலவே.

ஜேடி


No comments: