Thursday, December 29, 2011

கவிதை



ஆயுளைக் கழிக்கும் நாள்

தானேபுயல் 
ஒரு முதலாளித்துவத்தின் 
திமிர்பிடித்த மண்டையில்
வடியும் ஆங்காரத்தின் 
செயல் வடிவமாக 
கரையைக்கடப்பதுடன்
2011ன் செயற்பாட்டை முடித்துவைக்கிறது

இதனுடன் முடிந்துவிடுமா
கேரளம், கர்நாடகம், 
தமிழகத்திற்கு தண்ணீர் தரும் பிரச்சனை
ஆந்திரத்தின் பிரிவினை.

இரு வல்லாண்யின்
வார் பூட்டிய மிருதங்கத்திற்குள்

தால் ஏரியும், அதன் எழிலும்
உறைந்து கிடக்கிறது.
மிருதங்க பக்கத் தோல் 
பார்வையாளருக்கு 
நல்ல இசையை ஈந்தளிக்கிறது 

புழுக்கத்தில் தவிப்பவர்க்கு
நல்ல காற்று கிடைக்குமா?

ஒரே நாட்டின் வளர்ச்சிக்கு 
போட்டி போட்டு உழைத்து 
யார் இருந்தால் என்ன
நீதான் மேஸ்திரியாய் இரு என்றதற்காக
இன்று கிழித்து உறுவுகிறாய்,
என் குடல் திரௌபதியின் சேலையா?
எனக்காக நீண்டுகொடுக்கவும் 
ஆளில்லாமல் தான் நிற்கிறேன்
இத்தனைக்கும் 
உன் உழைப்பை 
சுரண்டிக்கொள்ளவும் நினைக்கவில்லை
எனக்கான சுதந்தர 
இருப்பைத்தான்கேட்டேன்
கிடைத்துவிடுமா?


கல்விக்கூடங்கள் ராணுவதளங்களாக
மாறினாலும் ஏற்றுக்கொகிற இஸ்ரேல்,
பாலஸ்தீனப்பிள்ளைகளுக்கு
சுதந்தரமான வாழ்நிலைக்கு
வழிவிடுமா?

ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான்
பாலைவனங்ளில் திரியும்
ஒட்டகங்களின் தொண்டைக்குழிக்குள்
எண்ணைக்கிணறை கண்டெடுக்க
(ஏழையாக மாறுகிறதற்கு 
காரணம் கண்டுபிடிக்காமல்)
வல்லரசுகளின் போட்டி கைவிடப்படுமா?


இவைகளை
அப்படியே தக்கவைத்துக்கொண்டு
கடந்த யுகங்களைப் புணர்ந்த 2011ன்று
பனிரெண்டு மாதங்களை
தன் கருவறையில் தக்கவைத்து
பிறசவிக்கிறது பிறசவிக்கிறது பிறசவிக்கிறது
2012ண்டான புதிய புத்தாண்டை!


மனிதனின் வாழ்நாளில்
ஒரு ஆண்டை கழிப்பதற்காகவே
வலுக்கட்டாயமாக
அவசரமாய் பிறக்கிறாயோ?

ஜேடி



 



No comments: