Tuesday, January 17, 2012


                                           

வாழு நேற்றோடுன் இன்றும்

எல்லாம் முடிந்தது என்று விழுகிறபோது முடிவே இல்லாமல் தொடர்கிறது வாழ்க்கை. 

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், நண்பன், குரு எல்லாரும்தான் எனக்கு மிகவும் அருகில் இருக்கிறார்கள்.
நான் தனியாகவே விடப்படுகின்றேன்
அவர்களுக்குறிய யோசனையை என்மீது திணிக்கிறார்கள் என்று நான் விலகிவிடும்போது.

எனக்கு நன்றாகவே தெரிகிறது அவர்களை அதிகமாக நேசிக்கிறேன்
என் மனம் அவர்களின் பேரில் தீரா காதல் கொண்டு அலைகிறது என்று
இருந்தாலும் என்னை தனியாகவே விட்டுவிடுகிறார்கள்
போனால் போகிறது என்று என்குடும்பத்தார் வேளைக்கு வயிற்றை நிறப்பிவிடுகிறார்கள்
நண்கர்களும் கைவிட்டுவிடுவதில்லை வெளியில் பார்க்கிறபோது ஒரு வணக்கம் சொல்வதோடு பிரிந்து விடுகிறார்கள்.

எல்லாம் பொய் என்கிறபோது வழியிருக்கிறது நீ உணரவேயில்லை
என் கைங்கிரயங்களைத்தருகிறேன் சீக்கிரம் வெற்றி அடைவாய் வாழ்த்துகிறேன் என்கிறான். 
அவன் கண் முன்னேதான் மிக உன்னதமான முறையைக் கையாண்டு மேல் வருகின்றேன்
அவனேதான் உன் முட்டால்தனமான முயற்சியால்  வானங்களின் நட்சத்திரங்கள் பூமியில் கொட்டிக்கொண்டேயிருக்கிறது
நீ வாழ்வதை நிறுத்திக்கொள் என்கிறான்.

பேசாமல் பேசுகின்றவர்களின் மூளையில் பதிந்திருக்கும் பாசம், அன்பு, பொய்யும் பொய்யில்லாக்கோபம், வேதனை, அசாத்தியம் இவைகளின் ருசியை பருகிக்கொண்டேயிருக்கும்போதுதான்
தலையில் இளமையைக்காட்டு கின்ற  கறுப்பு மயிர்களைக்காட்டிலும்  நரைக்கும் மயிர்கள் வீரியமாக வளர்வதை கண்டுகொண்டேன். நரைத்த மயிர்கள் வேகத்தை எட்டும்போது
நான் வாழத்தான் வேண்டும் மிக அவசியமாக சமூகத்தின் பதுங்குக்குழிகளில் படிந்திருக்கும் கசடுகளை கண்டுபிடித்து என் பயன் தரும் மனசாட்சியின் மூலம் நேற்றும இன்றும கலந்து விதைத்துவைக்க.


ஜேடி



No comments: