Tuesday, October 25, 2011

கவிதை

    வாழ                
தடை இல்லை  

காலொடிந்து                                                       
நீரில் முழ்கும்
வெள்ளை பல்லி
வெளியில் எங்காவது
உயிருக்கு போராடினால்
கரிசனையோடு
காப்பாற்றிவிடுகிறேன்
திடுமென காலையில்
வீட்டு தண்ணீர்க் குடத்தின்
மூடியை தொட்ட
குட்டி பல்லியை
அவசரமாய் தலை நசுக்கிப்போடுகிறேன்.

என்னைப்போலவேதான்
அவனையும் என் தாய் பெற்றாள்
வெறுமனேதான் அடிக்கடி
விஷம் தோய்ந்த பற்களால்
அவனை கோதிவிடுகின்றேன்
சற்று தூரம் சென்று
டீக்கடை வாசியிடம்
காதலியின் குவிந்த இதழில்
காம வெள்ளோட்டத்தை
உறஞ்சுவதுபோல் பேசுகிறேன்.

இருபது வருடங்களாய்
நட்பிலக்கணம் வகுத்துக்கொண்டே
அதிகாரியின்
பாதங்களைப் பற்றி
வைத்துவிட்டேன்
எனக்கான வெள்ளை மனு
உயர் பதவிக்காக.

இருபத்தியைந்திலிருந்து
நாற்பது வரை
எண்ணைப் பசைக் கொழிப்பால்
துப்பாக்கியை மனதுக்குள்
பிடித்து நடமாடினேன்
அதே எண்ணையின் குறுக்கீட்டால்
அவயங்கள் முடங்கி
பதுங்கு குழியைத்தான்
தேடமுடிந்தது
இப்போது
நண்பனும்,தம்பியும்,சார்பாளரும்
இல்லவே இல்லை
கூப்பிடும் தூரத்தில்.

ஜேடி






No comments: