மலரில் இதழ் 2 சுயபோதை
ஒரு வேளை, ஐதீகத்தில் ஊறிப்போன நகரம் என்பதால் எந்த நேரத்திலும் கச்சேரி, ஜீஸஸ் மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கு ஆபத்து நேரலாம். அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவே தலைமை ஆசிரியர்களுக்கு முதல் தளத்தில் அறை ஒதுக்கியுள்ளார்கள் போல.
மஞ்சல் நீர் கால்வாய்க்கு மேலே பல்லவர்கள் இருந்தார்கள், என்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றது. 1839திற்கு முன்னிலிருந்து அப்பகுதியின் வழி வழியாய் வருபவர்களின் வாய்மொழித் தகவலாய் இருக்கிறது. அப்பகுதி இன்னும் ஆய்வுக்குறிய பகுதியாகவே இருக்கிறது என்பதால் நம்பித்தான் ஆகவேண்டும். அப்பகுதியில் உள்ள நிலங்களை யாருக்கும் அதிகாரப் பூர்வமாக விற்கவோ, வாங்கவோ இன்றுவரை அங்கு தடையிருக்கிறது. இதே விதிதான் சுமார் நூற்று எழுபத்திரண்டு வருஷங்களுக்கு முன்பாகவும் கடை பிடித்திருக்கிறார்கள். அதனால்தான் ஜீஸஸ் பள்ளியை மஞ்சல் நீர்கால் வாய்க்கு கீழ் பக்கமாகவே நிறுவியிருக்கிறார்கள்.
கடும் முயற்சிக்குப் பிறகே இடத்தேர்வு முடிவு எடுத்திருக்கலாம். ஸ்காட் லாந்து மிஷினரிகள் முதலில் வாலாஜாபாத் வந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரம் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தாங்கள் இதுவரை அறிந்திராத தெய்வங்களை விக்கிரகங்களாக கணக்கிட்டுக் கண்டார்கள். இவைகளிலிருந்து விடுபட தங்களுடைய நம்பிக்கைக்குறிய தெய்வத்தை அறிமுகப் படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள். அதை எப்படி செயல்படுத்துவது. ஆய்வு நடத்திக்கொண்டே காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில், பத்து கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள முத்துவேடு என்ற கிராமம் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்கள். அங்கு முதலில் ஒரு மருத்துவ முகாகமைத் தொடங்கி பின்னாளில் அதை நம்பிக்கைக்குறிய சபையாக நிறுவியிருக்கிறார்கள்.
தங்களுடைய ஆண்மீக நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் நிறுத்தவேண்டு மென்பது ஆங்கிலேய மிஷினரிகளின் முக்கியத் திட்டம் அதற்கான வெள்ளோட்டமாகதான் காஞ்சிபுரத்திற்கு மேற்கில் முத்துவேட்டில் ஒரு சபை. கிழக்கில் வாலாஜாபாத்தில் ஒரு சபை என்று நிறுவினார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரத்தில் நேரடியாக மதத்தின் பெயரால் கால்பதிக்க முடியாது என்று அச்சப்பட்டார்கள். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு பள்ளியின் பெயரில் மிஷினரிகள் காஞ்சிபுரத்தில் நுழைகிறார்கள். அக்கால கட்டத்தில் இன்றய தாலுக்கா அலுவலகம் முழுவதுமே மிஷினரிகள் கயையகம் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போதய கச்சேரி தபால் அலுவலகத்தில்தான் முதன் முதலில் ஏழு பிராமண பிள்ளைகளை வைத்து ஜீஸஸ் ஐஸ்கூல் தொடங்கப்பட்டது. நகர பேருந்து நிறுத்தம் அருகில் அரசாங்க அலுவலகங் களுக்குச் சரியான இடம் இல்லாததால், ஒரு சிறியப் பள்ளிக்கு இவ்வளவு இடம் தேவையில்லை என்று காலப்போக்கில் தாலுக்கா, தாபால், காவல் நிலையம், கோர்ட் என மிஷினரிகள் வைத்திருந்த நிலத்தை, அரசு கையகப் படுத்திக்கொண்டது. கடைசியாகதான் மேற்கிற்கும், வடக்கிற்கும் இடைப் பட்ட ஒரு முலையில் ஜீஸஸ் ஐஸ்கூல் அமைந்து விட்டது.
மிஷினரிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் உதவியுடன் மண்டபம் கட்டினார்கள். அம்மண்டபத்தில் உயர்ஜாதிப் பிள்ளைகள் பயின்றார்கள். மதவாதிகளுக்குள் வெறுப்பு இருந்தாலும் வெளியில் காட்டாத நிலையில் இருந்தார்கள். மிஷினரிகள் சற்று காலூன்றி ஆசுவாசம் அடைந்தார்கள். அதன் பிறகு தாங்கள் நோக்கத்தை பள்ளியின் மண்டபத்திலேயே தொடங்கினார்கள். மானவர்களிடம் பேசி பெற்றோரை ஞாயிறு தொழுகைக்கு வரவைத்தார்கள். ஆங்கிலேயர்க் கல்வி புதிதாக சிறப்பாய் இருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டு பிள்ளைகள் அதிகமாக வரத் தொடங்கினார்கள். ஆனால் உயர் சாதியின் ஒரு பெற்றோரைக்கூட மதம் மாற்ற செய்யமுடியவில்லை.
மிஷினரிகள் காஞ்சிபுரத்தின் மதவாதிகளிடம் மிகவும் சோர்ந்துபோனார்கள். தாங்கள் வந்ததின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அதற்கு யார் சரியான நபர்கள், என்று யோசித்தார்கள் அப்போதுதான் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியின் கீழ்நிலையில் உள்ளவர்களை பள்ளிக்ககுள் இழுத்தால்தான் தங்களுடைய சேவை நிறைவேறும் என்பதை உணர்ந்தார்கள். அதை செயல்படுத்தும் விதமாக குறிப்பிட்ட வருஷத்திலிருந்து தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் பிள்ளைகளை பள்ளிச்சேர்க்கையில் அனுமதித்தார்கள். பள்ளியில் கீழ் ஜாதிப்பிள்ளைகள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டவுடன் உயர் ஜாதிப் பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை நிறுத்தி விட்டார்கள். அவர்களே பள்ளி வளாகத்திற்கு வந்து சண்டையிட்டார்கள்.
திடிரென்று மாணவர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. ஆனால் மிஷினரிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எதிர்ப்பிபுகள் வந்தால்கூட நாம் எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பது என்று தீர்மானமாய் இருந்தார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட பெற்றோர் சிலர் ஞாயிறு தொழுகைக்கு வந்துகொண்டு இருந்தார்கள். உற்சாகம் அடைந்த மிஷினரிகள் எல்லா மதத்தினரையும், சாதியினரையும் தொடர்ந்து சேர்த்தார்கள். மதத்தை தூக்கிப்பிடிப்பவர்களின் மத்தியில் எதிர்ப்பு அடிக்கடி கிளம்பினாலும், மற்ற மக்கள் கல்வி தரமாய் இருக்கிறது என்று ஆதரவு அளித்தார்கள். மிஷினரிகள் இரண்டு குதிரைப் பூட்டிய சார்ட் வண்டியில் சுலபமாய் பயணம் செய்தார்கள். ஞாயிறு தொழுகைக்கு கூட்டம் அதிகமானதால் கல்வியும், மதத்தையும் தனித் தனியாகப் பிரித்து, மதத்தை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.
ஜேடி
No comments:
Post a Comment