Wednesday, October 29, 2014

கட்டுரை

கல்விப்  புத்தகங்களை விமர்சிக்கவும், அதன் தரத்தை தீர்மானிக்கவும்மான சுதந்தரத்தை மாணவனுக்கு வழங்கினால் படிப்பில் ஆர்வம் கூடும்

பள்ளிகளில் முக்கால் (கல்லூரிகளிலும்தான். ஆனால் விகிதம் குறைவாக இருக்கலாம்.) பங்கு மாணவர்கள், படிப்புன்னா, ஏன் தலைத் தெறிக்க ஓடுகிறார்கள். நாலுமுறை பரிட்சை எழுதிப்பார்த்தாதான் தெரியுது. பனிரெண்டாவது பாஸ்பண்ணியே ஆகணும் என்ற தீவிர திட்டம் எல்லாம் இல்லை. ஆன்லைன் அப்லைபண்ணலாம்னு அரசு திட்டம் கொண்டாந்தப்ப நானும் ஆர்வமா பண்ணிட்டேன்.
தனிப்பயிற்சியோ, பள்ளி அணுகுமுறையோ இல்லாமல் பாஸ்பண்ணமுடியுமா? நாம படிக்கிற இலக்கிய புத்தகங்கள் இதற்கு ஏதாவது துணைபுரியுமா? என்றக்கேள்வி இருந்துகொண்டே இருந்தது.

அதற்கு அடிப்படையாக, தேர்வு எழுதும்போது பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் பிட் அடித்தல் என்று எந்த ஒரு சிறு தவறும் செய்யாமல் தேர்ச்சி பெறவேண்டும் முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று  முடிவு செய்தேன். உள்ளுக்குள் வருஷம் முழுதும் படிக்கிற மாணவர்களே குறிப்பிடத்தகுந்த அளவில் பெயிலாகிவிடுகிறார்கள். நமக்கு இருக்கிற வேலையில் இது சாத்தியமாகுமா என்ற பயமும் இருந்தது.

முதல் முறை எழுதியபோது,  இலக்கிய புத்தகங்கள் படிப்பதுபோலவே டெக்ஸ் புத்தகத்தை அதே பாணியில் ஒரு முறை முழுமையாக படித்துவிட்டு (அனா முழுமையா படிக்க முடியவில்லை. பல பாடங்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டியதாயிற்று) , கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறதாப் பார்ப்போம் என்று இருந்தேன். அதனால்,கொஞ்சம் தெம்மாங்கும் வந்துவிட்டது. புத்தகத்தை  பரிட்சைக்கு முன் ஓரிருநாள் படித்துச்சென்றேன். முதல் முறை (III குருப்)  தமிழ், வரலாறு  மட்டும் கைகொடுத்தது. ஆனால், மற்ற பாடங்களுக்கு நம் கற்பனை இட்டுக்கட்டல் உதவாது என்று புரிந்தது. ஆனாலும், யாரிடத்திலும் உதவி கேட்கவில்லை. இத்தனைக்கும் பல தெரிந்த நபர்கள்தான் ‘ஸ்கோடு, கண்காணிப்பாளர்கள்  என்று வந்து போய்கொண்டு இருந்தார்கள்.

அடுத்தடுத்த முறை சற்று கூடுதலாக கல்விச்சோலையில் பல ஆசிரியர்களின் கேள்வித்தொகுப்புகளை தேடிப்படித்தேன்.  கணக்குப்பதிவியல் மட்டும் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஒரு ஆசிரியரிடம் பேசியபோது, ஐந்துமார்க் கணக்கு மெத்தேடு ரெண்டு நடத்தினார். பிறகு மாலை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மனைவியைக்கூட. நாலுநாள் விட்டுட்டு இருக்கலாம். இணையத்தையும், பேஸ்புக்கையும் விட்டுட்டு இருக்கமுடியுமா? இதுல எங்க சிறப்பு வகுப்பு போறது. இருந்தாலும் முற்றிலும் ஆரம்பத்தில் கொண்ட பரிசோதனை முயற்சியை கடைபிடித்தேன்.

மூன்றாவது முறைதான் ரொம்ப சோதனை. கணக்குப்பதிவியல் பல  ஆசிரியர்கள் யூடியூபில் படம் எடுத்தில் குறிப்பு எடுத்துக்கொண்டேன். என் மகள் பரிட்சைக்கு முன்னாள் இருபது மார்க் கணக்கில் இரண்டு மாடல் கற்றுக்கொடுத்தாள்.  மறுநாள் எக்கனாமிஸ் தேர்வு அறையில் கலக்கா கொள்ளையில் அலைச்சல்போல மாணவர்கள் அவன் அவன் சக்திக்கேற்ப அடிச்சான். அந்த தேர்வாப்பாத்து  ஒன் மார்க் படித்ததுச்சென்றது ஏறக்குறைய   நாற்பதுக்கு சரியா எழுதுனேன். மூணு மார்க்,  ஐந்து இருக்கும். பெரிய கேள்விகளில் சரியாகவே படிக்கலங்கிறதைவிட, படிச்சது வரலை என்றுதான் சொல்லனும். அதற்குமேல் மூளையக் கசக்கி பிழிந்தாலும் ஒண்ணும் எழுதமுடியல. பக்கத்தில் இருந்தவன் இருபது மார்க்னு ரெண்டு சொலையா எழுதியிருப்பான்போல. அவனாக  வேணுமான்னு கேட்டான். அப்பதான் உன் முழுதிறமைக்கான சோதனை முயற்சி என்று சதா சொல்லிக்கொண்டே இருந்தது மனசு. அதனால பக்கத்தில்கூட திரும்பாது எழுதிவிட்டு வெளியே வந்தேன். ஆனால் அதுதான் பெயில் என்று வந்தது. கடைசியாக ஒன்றே ஒன்றுதான் நின்றது.

நான்காவது முறை அக்டோபர் -2014.  இந்த முறை 2008லிருந்து மிக முக்கியமாக ஒன்மார்க் கேள்விகள், சற்று கவனமாக ஐந்து, இருபது மார்க் கேள்விகள் கவனத்தில் கொண்டு. நான்கு இரவுகள் முழு மூச்சாக படித்தேன். மார்க் சீட் வாங்கியபோது பாஸ். ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பனிரெண்டாவது மனத்திருப்தியாக பாஸ்செய்தேன். இதை ஏன் இங்கு சொல்லவேண்டும். என் திறமை வெளிப்படுத்துவதற்காகவோ, பெரிய நேர்மைசாளி என்பதற்காகவோ அல்ல.

இலக்கியப் புத்தகங்கள் ஏன் விரும்பப்படுகிறது, ஏன் ஆர்வமாக வாசிக்கப்படுகிறது என்று யோசிக்கிறபோது, வாசிக்கிறவனுக்கும் சரி. எழுதுகிறவனுக்கும் சரி. அவனுக்குள் ஏற்படும் மன நிறைவு ஒரு பக்கம் இருந்தாலும்.  தனக்கான மதிப்பை அதன் நுட்பம் அறிந்தவர்கள் மத்தியில் கூட்டித்தருகிறது.

பள்ளிப் புத்தகங்களைக்கூட  வாசித்து விமர்ச்சிக்கிற, அதன் நுட்பங்களை, ஆழங்களை மாணவர்களே விவரிக்கிற, விமர்சிக்கிற முறைகளை வகுத்தால், நிச்சயமாக மாணவர்கள் பள்ளிக் கல்வி புத்தகங்களில் மிக ஆர்வமானவர்களாக மாறுவார்கள்.  உதாரணம் ஒரு வகுப்பறையில் அநேகமாக மாணவர்கள், சக மாணவனை ஆசிரியரிடம் கோள் சொல்லுகிறவனாகவும், குறை கண்டுபிடிப்பவனாகவும் இருக்கிறான். மாணவர்களுக்கு மட்டும்மல்ல. பொதுவாக மனிதம்  இயல்பிலேயே அத்தன்மை ஒவ்வொருவரிடமும் அபரிதமாக இருக்கிறது.  ஒரு விதத்தில் பார்த்தால் இது பலவிதமான சமூக சீர்கேட்டு வழிக்கான ஆரம்பமாகக்கூட இருக்கிறது.

பொதுவாக மனிதனுக்கு தன் இயல்பை வெளிப்படுத்த, அதன் மூலம் நிம்மதியை மனம் உள்வாங்கிக் கொள்ள பிறரை குறைகூறுதல் ஒரு தேவையாக பலருக்கு இருக்கிறது. வேகமாக வரும் தண்ணீரை மடை மாற்றுதல்போல சிறுவயதிலேயே அப்பழக்கத்தை புத்தகங்கள் மீது திருப்பிவிட்டுப் பார்க்கவேண்டும். விமர்ச்சிக்ற  அல்லது தன் திறமையை நிறுவுகிற வேலையை பள்ளிக் கல்வி புத்தகங்களில் திருப்பிவிட்டால். புத்தகங்கள் வாசித்தல் பழக்கம் கூடுதலாகும், படிப்பின் மீது கவனம் குவியும். அதிக பட்சமாக பின்தங்கிய மாணவர்கள் அநேகமாக தேர்வில் தவறிவிடாமல் இருக்க வழிவகுக்கும்.

இன்னொரு விஷயம் நான் சொல்லவந்தது, இலக்கிய புத்தகங்கள் வாசித்தல் பழக்கம் நிச்சயமாக கல்வித் தேர்வுபயத்தை லகுவாக்கும். இலக்கியப் புத்தகம் வாசித்தல் பழக்கம் என்பது, பலவிதமான நுணுக்கங்களை தெளிவுபடுத்தும். பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனும் நூலகங்களை பயன்படுத்த ஊக்குவித்தல் வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் அதிகப்படியாக அதனை வலியுறுத்தவேண்டும். படைப்பு புத்தகங்கள், ஒருபோதும் பாடப்புத்தகங்கள் புரிதலைக் கெடுத்துவிடாது என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

டேனியல்

No comments: