வெள்ளையானை ஜெயமோகன் 3
“நீ
வைணவன் என்று சோன்னாய், ஆனால் காத்தவராயன் என்றால் சைவப்பெயர் இல்லையா?“ ஏய்டன் இந்தியாவிற்கு
வந்து அதன் சூழல்களை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில். இந்தியாவின் மத பேதங்களை
அதன் பிரிவுகளை அவ்வளவு நுணுக்கமாக ஏய்டன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில்
காத்தவராயன் மீது சந்தர்ப்பவாதி என்ற பிம்பத்தை நிறுவ ஆசிரியரின் குரல் லேசாக சேந்திருக்கிறது
என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
இந்திய
பிரிட்டீஸ் அரசாங்கம் அடிமையாக வாய்த்த மக்களின் ரத்தத்தைக்குடிக்கிறது என்கிற விஷயத்தை
ஏய்டன், மிக்கின்ஸீடம் ஆலோசிப்பார். அதற்கு மிக்கின்ஸ் “பறையர்களை எல்லாரும்தான் கொல்கிறார்கள்.“
என்று மிக லேசாக பிரச்சனையை பொதுப்படையாக்கிப் பேசுவான். அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களின்
வர்க்கத்தில் இந்திய ஒட்டுமொத்த மக்கள்மீதும் (சில வகையில் எற்றத்தாழ்வுகள் இருந்தாலும்)
‘இவர்கள் கறுப்பினத்தவர்கள்‘ என்கிறப் பொதுப்படையான கருத்தும், அவர்களைத் தங்கள் கட்டுக்குள்
வைத்திருப்பதே பிரதானம் என்ற சூழல் இருந்திருக்கிறது. அக்காலகட்டங்களில் மிக்கின்ஸ்
இந்திய உயர் சாதியினருக்கும், செல்வந்தர்களுக்கும் பயந்து குறிப்பிட்ட விஷயத்தை பொதுப்படையாக்கிச்சொல்ல
வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஆசிரியர்தான்
இந்திய உயர்சாதி, செல்வந்தர்கள், பறையர் மீதான தலையீட்டை மறைத்து அது மேலோட்டமான
வியஷயம்போல பொதுப்படையாக கட்டமைக்கிறார்.
அடிமைப்பட்டவர்கள்
பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவிட்டால் ''சொந்த சகோதரர்களையும், தாய்த் தந்தையர்களையும்
துறந்து விடுகிறார்கள். அவர்களிடம் வறட்டு ஆணவம் தலைத்தூக்கிவிடுகிறது.“ என்கிற தர்கத்தை
வைத்துச்செல்கிறார். அதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், ‘எந்த இனக் குழுவிலிருந்து
பெற்றோர்கள், அதிகமாக வெளியேத் துரத்தப்படுகிறார்கள். தன் சொந்த சகோதரனுக்கு சிறிதளவில்
செலவுசெய்தப் பணத்தைக்கூட வட்டிக்கடன்போல கணக்குபோட்டு திருப்பிக்கொடுப்பது, அல்லது கேட்பது,
எந்த சமூகத்தில் தற்போதும் இருக்கிறது‘ என்கிற புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் எல்லா
மனிதனிடமும் இந்த மட்டமான புத்தி இருக்கிறது என்பது தெளிவாகிவிடும். இதில் பறையர்களிடம்
மட்டுமே இக்குணம் சிறப்பம்சம் பெற்றிருக்கிறது என்பதுபோல கட்டமைப்பு ஆசிரியரின் புரிதல்.
பொதுவாக
ஜெயமோகன் சாருக்கு அடித்தட்டு மக்களின் பிம்பங்களை நுணுக்கமாக, ரசனைத்தன்மையுடன் உள்வாங்குதல்
கைக்கூடி வருவதில்லை. நாவலில் வருகின்ற அடிமைப்பட்ட சிறு பிள்ளைகளை வர்ணிக்கும்போது
‘நிர்வாணம், அழுக்கு, புண், கறுப்பு, நாற்றம்‘
இப்படியான பிம்பங்களைத்தான் தொடர்ந்து வைக்கிறார். இந்த பிம்பத்தை, சாதாரண, மனிதனை
நேசிக்கத்தெரியாத மேட்டுக்குடி மனிதன்கூட இயல்பாக
சொல்லிவிடுவான். அதைத்தாண்டி படைப்பாளியாக அந்தப்பிள்ளைகளின் மூக்கு எந்த விதத்தில்
ஒழுகிக்கொண்டு இருக்கிறது. ஒழுகிய மூக்கை இடக்கையாளும், வலக்கையாளும் தேத்துத்தேய்த்து
கன்னத்தில் ஏடு கட்டிக்கிடக்கும் கோணத்தின் நிலை என்ன? தலைமயிர்கள் சுருட்டையா? சேறு,
சகதியில் விளையாடிய கால்களின் முழங்கால்வரை சேற்றின் வெடிப்பு இருந்ததா‘ போன்ற சாதாரண
அவதானிப்புக்கூட கிடையாது.
ஆசிரியர்தான்
பாத்திரத்தைப் படைக்கிறவன். எல்லாவற்றுக்குள்ளும் அவன் ஆளுமை இருக்கவேண்டும். ஆனால்,
அவனவனுக்குள், (பாத்திரங்கள்) அதற்குள் சென்று, அவனவனாக, அவைகளாகவே வெளியே வரவேண்டும்
என்பது ஆசிரியருக்குத் தெரியாததல்ல. ஆனால், ஜெயமோகன் சார் இந்நாவலில் கணக்கற்ற இடங்களில்
மிக வெளிப்படையாக தானே பாத்திரமாகவும், ஆசிரியராகவும் மாறிமாறி வருகிறார். ஏய்டன் வாசகம்
“பிரமாண்டமான வெடிமருந்து மாலையுடன் வா“ நன்றாக கவனிக்கவேண்டும் இது நிச்யமாக ஏய்டனின்
மூளையில் உதித்த வாசகமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் cபெருமந்தூர் நிகழ்வுக்கு முன் உலகின் எந்த
மூலைபோராளிக்கும் மாலைபோட்டு அழிவை ஏற்படுத்துகிற உத்தி தெரிந்திருக்கவில்லை.
ஏய்டன்
பஞ்சத்தை நேரில் கண்டு ஆய்வுசெய்ய செங்கல்பட்டு போகிறார். உள்ளூர் தாசில்தாரை பார்க்கவேண்டும்
என்கிறார். “தாசில்தார் நீண்ட நாமம் போட்டிருந்த பிராமணர் வந்ததும்“ இருவரும் பேசுகிறார்கள்.
ஏய்டன் இங்கேத் தங்கவேண்டும் இடம் ஆய்த்தப்படுத்துங்கள் என்று சொல்லாத பட்சத்திலேயே
உள்ளூர் தாசில்தார் “இன்ஸ்பெக்ஷன் பங்ளாவில் இன்னொரு தாசில்தார், அவர் மனைவியுடன்
தங்கியிருக்கிறார். அவரை உடனே காலி செய்யச்சொல்லிவிடுகிறேன். நீங்க தங்கி இளைப்பாருங்க“
என்று தாமாகவே சொல்லுகிறார்.
குருட்டுத்தனமாக
அதிகார மையங்களுக்கு அடிபணிந்து போவதால்தான். குடும்பத்துடன் குடியிருக்கும் தன் சக
பணியாளனை நிர்தாட்சணையாக உடனே காலிசெய்துவிடுகிற யோசனையை உள்ளூர் தாசில்தார் முன்மொழிகிறார்.
….
மேலும்
பார்க்கலாம்….
டேனியல்
(குறிப்பு-
இப்பமட்டுமென்ன வாய்தாம். வாதாடுவதில் நியாயமே இருந்தாலும். வாதாடும் வாய் எது? அதைப்பொறுத்துதானே
எல்லாம் நடக்கிறது)
No comments:
Post a Comment