Friday, January 24, 2014

விமர்சனம்,



அதிகாரத்தின் தலையில் பாம்பின் விஷம்

“உப்பு இருக்குதா, என்னதான் கொழ்பு செய்யிறியோ“ எனும் குடும்பத்தின், கடவுளின் தரிசனங்களிலேதான் ஆண்மா வாழ்கிறது எனும் மதவாதியின் அன்பற்ற அரக்கத்தனத்தை சகித்து அரைவயிறு, கால்வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் வாழ்ந்துவிடலாம்.

ஒரு நிறுவனத்தின் தலைமையையும், நாட்டின் சர்வ அதிகாரங்களையும் பெற்றவர் கொஞ்சம் பெருமை, சாதாரண போக்கிரித்தனம் இருந்துவிட்டாலும் போதும். தன்மானம் உள்ளவனை புற்றுநோய்போல அறித்துவிடுவான்/வாள். அதில் ஆண்,பெண் பேதமில்லை. 

இன்று காலையில் ஒரு கிறித்தவ சிகிட்சை மையத்தின் கடைநிலை ஊழியனைப் பார்த்தேன். சற்று பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே அந் நிறுவனத்தின் கொத்தடிமை பிரயோகம் நிர்வாகத்தை அறிந்தவன். என்பதால் “அண்ணே, எப்படி இருக்கிறீங்க. வேலை எப்படி இருக்கிறது“ என்றுதான் கேட்டேன்.

கொஞ்சம் அதிவினோத விஷம் இருந்தால் அருந்திவிட்டு நாண்டுகொண்டு சாகலாம் அவ்வளவு துக்கத்தை, கொத்தடிமைத்தனப் புழக்கத்தை அடுக்கிக்கொண்டே போனார். அவர் துக்கத்தை சொல்ல நாம ஏன் சாகணும் என்பது நியாயமான கேள்விதான். ஆனால், ஒரு மனிதன் அல்லது ஒரு வர்க்கம் கண்னெதிரே படும் வேதனையை பார்த்து, கேட்டு சகித்துக்கொண்டு இருப்பது சாவதை விட லேசான காரியம் இல்லை.

“என் முப்பது வருஷ சர்வீஸ்ல இந்தமாதிரி ஒரு அரக்கத்தனத்தின் நிர்வாகத்தை நான் கண்டதேயில்லை. வாரத்தில எத்தனை முறை உபவாசம், எத்தனை முறை ஜெபப்பிரசங்கம்,  அத்தனை முறையும் எங்கள் தன்மானத்தை ஒடுக்குவதற்காகப் பயிற்சி எடுக்கிறார்களோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

தங்களுடைய நியாயத்தை விளக்கக்கூட என் முன்னே, பேசுவது இருக்கக்கூடாது. இளம்பெண்கள் ஓய்வுநேரத்தில் யாரிடமாவது எதேச்சியாக பேசினால் ‘அவனோடு ஓடிப்போவதற்கு போவதற்கு திட்டம்போட்டுட்டு வருகிறாயோ‘ ‘அங்க ஏன் நிக்கிற.‘ தண்டம்போட்டு சம்பளத்தை பிடிப்பது. கடைநிலை ஊழியர்களைக் கொத்தனார் வேலை செய்யவைப்பது. பணியாளர்களை ஜென்மம் சிந்திப்போகிற வார்த்தைகளால் திட்டுவது. இரத்தம் உறிஞ்சும் மிஷின் மிஷன்நிர்வாகம் செய்தால் நரகத்தை பூமியிலேயே அனுபவிக்கிறோம். எங்களை விடுவிக்க நாதியற்று நிர்கதியாய் நிற்கிறோம். வயிற்றுப் பிழப்புக்காகத்தான் தினந்தோறும் இத்தனை  வேதனைகளைச் சகிக்கவேண்டியுள்ளது. நிர்வாகத்தின் துதி பாடிகள் செழித்து வாழ்கிறார்கள். தாய் உள்ளம் கொண்டவள் பெண் என்கிறார்கள். அதிகாரம் கிட்டாதவரைதான்போல் இருக்கிறது“ என்றார்.

என்னால் மேலும் கேட்கவே முடியவில்லை. “அண்ணா, நான் வருகிறேன் என்று விரைவாக வந்துவிட்டேன். ‘யோபுவின் நேர்மைக்கு சாத்தானின் கடவுள் அனுமதிபோல‘ சிறு குழு நிர்வாகங்களின்  கடைசி அய்ந்து வருஷ நிர்வாகத்தை, கடவுள் சாத்தானின் தலைமையில் விட்டுவிடுவாரோ? என்று நினைத்துக்கொண்டேன். 

வேலையிலிருந்து வீடு திரும்பும்போது. கையில் பைசா இல்லை. நாளைய பொழுது எப்படி போகுமோ என்று நண்பரிடம் பேசிக்கொண்டே வந்தேன். “போடா. கடவுள் சும்மா விடமாட்டார். இஸ்ரவேல் மக்களை நாற்பது வருஷம் எவ்வளவு மகத்துவமாய் நடத்திவந்தார். நம்மை சும்மா விட்டுவிடுவாரா? என்றார். 
 
எனக்கு சட்டென காலையில் அந்தக் கடைநிலை ஊழியரின் வேதனைக் குரல்தான் நாபகம் வந்தது. ஆமா மயிரு. நாலு வருஷமா நிர்வாகத்துல மக்கிச் சாவுரவனைப் பற்றிப் பேச எந்தக் கிறிஸ்ததவனுக்கும் துப்பில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு பூட்டாணுங்க.“

டேனியல்  

No comments: