Friday, June 14, 2013

கவிதை



      ஈனுதல் 

ரத்த நரம்புகள் ஓடும் இலையாய்
நீண்ட காதுகளைக்கொண்ட
வெண் முயல்.
குளித்து வாசம் பூசிய
ஆறுமாதக் குழந்தையாய்த் 
தூக்கி முத்தமிட்டுவிடலாம்.
வெடித்துப்  பறக்கும் பஞ்சை
தன் மேனிக்குள் சொருகியிருக்கிறது.

இன்று, 
முதல் பிரசவத்தைப் பிரசவிக்கத்
தன்னைத்தானே மருத்துவச்சியாய்
மாற்றி வருகிறது.
அறைக்குள்தான் கிடக்கிறது
சூரியன் தன் பாட்டுக்குப் போகிறது,
மாதங்கள், வாரங்கள், நாட்கள்
சுவர் கடிகார டங் சத்தம்
எதையுமே அறிந்திருக்கவில்லை.

ஆனாலும், 
மறுநாள் அதிகாலைப் பிரசவம்
விரசமில்லாத பால் காம்புகள்  
கண்மூடிக்கிடக்கும் குழந்தைகளுக்கு
வயிற்றுப்பகுதித் தெளிவாய்த் தெரிய
தன் பஞ்சு மயிர்களைச்
சுத்தமாய் வழித்த பிறகு 
எல்லையில்லா நோவுகளைச் 
சத்தமில்லாமல் கடந்து
ஈன்றுவிடுகிறது.
இத்தனைக்கும்,
தாயைக்காக்கச் சக்த்தியற்ற  
பிள்ளைகளை.

தாயே
உன் அன்பு பெரியதடி.

ஜேடி


No comments: