Friday, April 26, 2013

கவிதை

                     நலம்,  நாதி, நாடு

கடலுக்கு நேராக  வானத்தில் 
பறக்கும்போது
எனது நாடு
இந்தியா என்பதில் பெருமை.

விமானச் சக்கரம்
தலைநகரில் தரைதட்ட
தமிழ்நாட்டில்
கால் பதியத்தான் வாழ்வு.

தடதடக்கும் சத்தம்
மிதமாகி
சென்ட்ரலை குறுக்கு வெட்டாகக் கடந்து
அண்ணாவின் நகரத்தை
அடைந்துவிட்டால் நிம்மதி.

இருதலை ஓட்டிகளின் வாகனம்
கோபுரத்தைக் கடந்து
நுழைந்தபோதும்
தொப்புல் கொடி அறுந்த இடத்தில்தான்
நல்ல தூக்கம்.

இப்படி
நம்பிக்கையுடன்தான்  உருண்டது
இரு சக்கர வாகனம்

அண்ணன், தம்பிகள்
ஓடிவந்தார்கள்
 தம்பி
கிராமங்களில்
மேலாண்டை வீதியார்
சோறு சமைக்கும் பாணையில்
நெருப்பைச் சமைத்து
ஊட்டிவிட்டார்கள்
ஜீரணம் ஆகாத நெருப்புகள்
வயிரை அரிக்கிறது,

நீ போகாதே, போகாதே, தம்பி போகாதே...

நலமற்றவர்களாய்
நாதியற்றவர்களாய்
நாடற்றவர்களாய்
போகிறோம் என்பதின்
எதிர்பதமாக வைத்துக்கொள்கிறேன்
அண்ணன், தம்பிகளே.

ஜேடி


No comments: