Tuesday, August 28, 2012

கவிதை


முடிவுராத இருவருக்குமான முரண்

ஒரே
ஒரு முறை
வருகிற நாள்
எனக்கும்
உனக்குமான
நாளாக இருக்கும்.

முரண்பாடுகள் முற்றி
தலை வீங்கி
வார்த்தைகள் வழிந்து
இதயத்தை நிரப்புகிறபொழுது

நம்
இருவருக்குமான
பாதை
இரு வேறு
திசைகளைக் காட்டி
கொக்கரிக்கும்,

கடந்த காலம் முழுக்க
நடந்துகொண்டதை
நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே

ஒரு
மழைத் துளியின் வேகமாக
எதிர்காலம்
முடிந்திருக்கும்.

நானோ
நீயோ
எங்கு இருந்தோம் என்பது
நம்
 இருவருக்குமேத் 
தெரியப்போவதில்லை.

ஜே.டேனியல்

No comments: