எஜமானர்கள்
நீண்டநாக்குகளில்
உமிழ் நீரை
ஒழுகவிடும் நாய்கள்
எதற்காகவும்
பணம் வீசும்
எஜமானர்களின்
அழுக்கு படிந்து நாறும்
பாதங்களை
நக்கிக்கொண்டே இருக்கிறது
புணர்தளில்
மூர்க்கத்தை காட்டும் நாய்களைப்போல்
தன் எஜமானர்கள்
சிந்திவிடுகின்ற
துணுக்குகளை பொறுக்கிக்கொள்ள
முண்டியடித்துக்கொள்கிறார்கள்
தன்மானத்தைத் துறந்தவர்கள்
மாதம்
முக்கால் இலட்சம்
வாங்கும் கணவன்,மனைவிகூட
எஜமானர்கள் போடும்
கேவலம் ஒருவேளை
வயிற்றை நிறப்பும்
இலவச சோற்றுக்காக
அவர்கள் வழிக்கு வரமறுக்கும
அன்றாடங்காச்சிகளின்
குரல் வலையை நெறிக்க
பொய்சாட்சி சொல்கிறார்கள்
எஜமானர்கள்
வேறு யாருமல்ல
நேற்றுவரை
இவர் எடுத்தமுடிவுகளுக்கெள்ளாம்
மறுப்பு தெரிவித்தும்,எதிர்த்தும், ஆதரித்தும்
பேசியவர்களிலிருந்து வந்தவர்கள்தான்
இன்று
கூரிய ஆயுதங்களாய்
முளைத்த பற்களில் உதிரும்
வார்த்தைகளை
எல்லைக்கடந்து நிர்ணிக்கிறார்கள்
இப்போது எதற்கும்,எவரிடமும்
சிறிதேனும் மறுப்புக்கூடயில்லை
பலமாக கைமட்டுமேத்தட்டுகிறார்கள்
மண்ணில் எழும்பி
மனிதனில் கலந்து
அமானுஷ்யமாய் உழலும் வாசத்தை
துற்வாடை என்று புறந்தள்ளி
எஜமானர்களுக்கு
ஏற்ற வாசத்தை
அவர்கள் அறையில் நிறப்பி வைக்கிறார்கள்
எஜமானர்களுக்கேற்ற வாசத்தை
நிறப்பிவைக்கிறவர்களை
எஜமானர்கள் சிறிதும் யோசிக்கவிடுகிறதேயில்லை
தன் பெறுமை,புகழ் நிலைக்க
எப்போதும் நீதியையும்,உண்மையையும்
கொல்லுதலை எல்லாவெளியிலும்
நிறைந்திருக்கும் நியாயமான
உண்மைபோல்
உற்சாகமாகவே நிரந்தரமாக
கட்டமைகத்துவைக்கிறார்கள்
எஜமானர்கள்
எதையும் செயலாக்கம் செய்வதற்கு
வெறுமனே
வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறார்கள்
அவர்களுக்குச் சொந்தமானது
ஒன்றையும் இழந்துவிடுவதேயில்லை
இழப்பு இல்லையே தவிற
தங்களுக்குக் குவிவதை
தடைசெய்ததேயில்லை
எஜமானர்கள்
யுகங்களைக் கடந்து
நிற்க முயற்சிக்கிறார்கள்
நீண்ட காலம்
நீதியை நிலைநிறுத்த
மறுத்துக்கொண்டே.
ஜேடி
No comments:
Post a Comment