பாண்டிச்சேரி பிரஞ்ச் ஆய்வு அரங்கம் மற்றும் த.மு.எ.க.சங்கம் இணைந்து நடத்திய வரலாறும் இலக்கியமும் கருத்தரங்க கூட்டம் (10,8,11) முதல் நாள்
தமிழக வரலாறும் இலக்கியமும்
பேரா. கே.என். பனிக்கர் சுந்தராமசாமியின் ‘புளியமரத்தின் கதை‘ சிவசங்கரன் பிள்ளையின்‘ ‘தோட்டியின் மகன்‘ ‘ஏணிப்படிகள்‘ இவைகளில் எல்லாம் சாதாரண மக்களின் வாழ்வியல் வரலாறு இருக்கிறது. உண்மையான வரலாறும்,இலக்கியமும் சமூக மாற்றத்திற்கான வழியாக இருக்கிறது.(இடைவேளையில் சாப்பிடும்போது ஒரு தோழர் சில பேராசிரியர்கள் பேசியஉரை சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார்.உடனே தோழர் தமிழ்செல்வன் ‘ஏப்பா எல்லாத்தையும் விட பனிக்கர் பேசினதுதாம்பா சிறப்பு, உமக்கு ஆங்கிலம் தெரியல என்று நகைச்சுவையாகச் சொன்னார். அது எனக்கும்மானது என்று நகைத்துக்கொண்டேன். பனிக்கர் உரையை முழுமையாக குறிப்பு எடுக்கமுடியவில்லை.)
பேரா.அருணன் வரலாறிலிருந்துதான் தத்துவம் பிறக்கிறது. கடந்தகால வரலாறும்,தத்துவமும் ஒன்றை ஒன்றுசார்ந்து இருக்கின்றது.ஆரம்ப காலகட்டங்களில் வரலாறு வாய்மொழியாகத்தான் இருந்தது. பிறகு விசாரித்து அறிந்ததிலிருந்து வரலாறு தொடங்குகிறது. வரலாறு அறிவு சார்ந்து இயங்குகிறது. இலக்கியம் அறிவு,உணர்வுசார்ந்து இயங்குகிறது. ‘சாண்டில்யன்‘ நாவல் தொடங்கிபார்த்தாலும் அதில் மக்களுக்கான உண்மையான வரலாறு இல்லை. வரலாறு என்பது குறிப்பிட்ட காலத்தின் மக்களின் வாழ்முறையில் நேர்மையான சாரத்தை சொல்லவேண்டும்.சரித்திர நாவல்கள் சமிபத்தில்தான் ஓரளவு உண்மைத்தன்மையுடன் உறுவாகிவருகிறது.ஆகையால் தற்போது இலககியத்தோடு கூடிய வரலாற்று பங்கை நாவல்கள் செய்துவருகிறது‘என்றார்.
பேரா.கே.இராஜன். சங்க இலக்கியம் தொல்லியல்
தொல்லியலில் கிடைக்கின்ற பொருள்களையும் சங்க இலக்கியங்களையும் வைத்துக்கொண்டு தமிழகத்தின் முழுமையான வரலாற்றை சொல்லிவிடமுடியாது. இந்தியளவில் காலங்காலமாய் நிறுவியிருக்கும் வரலாறுகள் அதிக அளவில் குறைபாடுள்ள வரலாறுகள்தான்.தமிழகத்தில் மூவாயிரம் ஊர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை. உயரமான நடுகல்கள் கண்டுபிடித்துள்ளோம், அதன்மூலம் மனிதன் குழுவாக வாழ்ந்திருக்கிறான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பதுக்கைகள் கிடைத்திருக்கின்றன அவைகளை ஒரு தலைவனுக்குறிய படுகையாகருதுகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நெற்கதிர்கள் கண்டுபிடித்துள்ளோம். தமிழகத்தின் கிடைத்துள்ள சிலகுறியீட்டு ஓடுகள், பொருட்கள் இலங்கைப்பகுதியிலும் கிடைத்துள்ளது. எப்படியான பொருள் கிடைத்தாலும் பழமையான மக்களின் வாழ்வுமுறையின் சில கூறுகளை கானமுடிகிறது, ஆனால் அக்கால மனிதர்களின் உணர்வுகளை அறியமுடியவேயில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
பேரா.சுப்புராயுலு சோழர் கால வரலாறும் இலக்கியமும்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர்கள்,சமயம் சாராதவர்களாய் இருந்தார்கள். தற்போது ஒரு சார்புடைய மதங்கள் ஓங்கியுள்ளதுபோல் அக்காலத்தில் இருந்ததில்லை. தமிழகத்தில் சமணம்தான் முதல் சமயமாக தோன்றி வளர்ந்தது. சங்ககாலத்தில் ஒரு மதம் பெருவாரியாக நிறுவனப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததில்லை. சமணர்தான் தமிழர்களுக்கு முதல் முதல் எழுத்தறிவு கொடுத்தவர்கள்‘ என்றார்.
பேரா. வேலாயுதம் பாண்டியர்கால வரலாறும் இலக்கியமும்
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல்தான் பாண்டியர்கால ஆட்சி தொடங்கியது முதல் முதலாக பாண்டியர்களின் வரலாற்றை ‘நீலகண்டன்‘ வெளியிட்டார். பாண்டிய,சேர,சோழநாட்டின் முழுமையான உண்மையான வரலாறு இன்னும் வரவில்லை. அரசனை மையப்படுத் துவதுதான் வரலாறு என்று எழுதப்பட்டது, சமூகத்தில் நம்பப்பட்டது. சுதந்திரமான மக்களின் வரலாற்றை சொல்லப்படவில்லை. எழுத்தாளர்கள் சாதாரன மனிதர்களின் வாழ்வை எழுதுவதின் மூலம் உண்மையான வரலாறுகள் உறுவாகும்.
வா,கீதா இந்திய வரலாற்றியலில் வட்டாரங்களும் அவற்றில் இலக்கியங்களும்.
தமிழகத்தில் சு. வெங்கடேசனின் காவல்கோட்டம், தெலுங்கு பேசும் மக்கள் பிழைப்புத் தேடி தமிழகத்தில் வந்து தங்களை நிறுவிக்கொண்டதைச் சொல்லுகிறது. அது கூறுகிற தொடற்சியான தரவுகளில் இருந்து தமிழகத்தின் வரலாற்றை அறியமுடிகிறது. இதுவரை யாரும் சொல்லாதக் கருத்தை பல்வேறு தகவல்கள்மூலம் சொல்லியிருப்பது சிறப்புக்குறியது. தற்போதயநிலையில் உயர் சாதிக்கும் தலித்துகளுக்கும் நடக்கின்ற தீண்டாமையை பிரச்சனையை ஒடுக்கப்படும் நிலையை காவல்கோட்டம் சொல்லாமல் விட்டிருப்பது கேள்விக்குறியதாகத்தான் இருக்கிறது.
ஜோ.டி குருஸின் ‘கொற்கை‘ மீனவர்களின் வாழ்நிலையை மிகவும் சிறப்பாகச்செய்கிறது. இரு ஜாதிகளின் உயர்வு தாழவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. வணிகத்தில் ஒரு சாராரின் வாழ்நிலை உச்சம், ஒரு சாராரின் சரிவுகளை சொல்லுகிறது. இப்படியான ஆண்கள் எழுதும் நாவல்கள் வரலாற்றின் நிகழ்வுகளைப் பதிவு செய்தாலும் பெண்களுக்கான வாழ்வியல் வரலாற்றை சொல்லவில்லை.பெண்களே தன்னிச்சையாக தங்கள் நடைமுறை வாழ்வை நடத்திச்செல்லுகிற விதமாக வரலாற்றை அமைக்க அச்சப்படுகிறார்கள். ஒரு சராசரி பெண் ஒரு சராசரி ஆணைப்போல் நேரடியாக சமூகத்தில் இறங்கி செயல்பட முடியவில்லை. இப்படியான சூழலில் எதைப்பிடிப்பது. சமமான வரலாற்றை எப்படி கட்டமைக்க முடியும். பாமா தலித் என்பதால் தலித் என்ற நிலையிலேயே பார்கிறோம் அவர்கள் படைப்புகளில் கல்விக் குறித்து நிறையஇருக்கிறது‘என்றார்.
10,8,11 அன்று நடந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அத்துனை ஆளுமையாளர்களில் முழுமையான பேச்சை நான் இங்கே தந்துவிடவில்லை. எனக்கு ஈர்ப்புடையதாக இருந்தவைகளை மட்டும் நான் பிடித்துக்கொண்டேன். அவைகளைத்தான் தந்துள்ளேன். பாண்டிச்சேரி பிரஞ்ச் ஆய்வு அரங்கம் மற்றும் த.மு.எ.க.சங்கம் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்தியது சிறப்பு, த.மு.எ.க.ச வால் மட்டுமே எந்த பாகுபாடுமின்றி இப்படியானக்கூட்டம் நடத்தமுடியும் என்று நினைக்கிறேன்.(ஆனால் அங்கேயும் ஒரு சார்புநிலை இல்லாமல் இல்லை) மேலும் எனக்குள் எழுந்த கேள்விகள். மேற்பேசிய பேராசிரியர் உட்பட மிகவும் பிரபளமாய் இருக்கிற நாவல்களைப் பற்றியேயும் அதிலிருந்தே வரலாறுகளை கட்டமைக்கிறார்கள். நாவல்களோ தொல்லியல் பொருள்களோ கிடைக்காத தமிழகத்தின் வரலாறு என்ன? ஒரு சில மாவட்டங்களிலிருந்து வருகிற தகவல்கள்தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் வரலாறா? வா.கீதாவின் உரையில் அனேகமாக இரண்டு நாவல்கள் குறித்தே பேசினார்கள். ஒர், இரு மாவட்டத்தின் வரலாற்றுத் தகவல்கள் எப்படி முழுமையான தமிழக வரலாறு என்று ஏற்கமுடியும். ஒருவேளை வா.கீதா உள்நோக்கத்தோடு பேசியிருந்தால் மீண்டும் தவறான வராலாறு அமைய வழிவகுக்காதா? என்ற கேள்வியோடு வெளியேறினேன். ஆனால் மிகவும் சிறப்பான புரிதல்களை கூட்டம் ஏற்படுத்தியது.
12.8.11 கருத்தரங்கம் பின் எழுதுகிறேன்.
ஜேடி
2 comments:
ஓர் இரு நாவல்களைக் கொண்டே ஒரு முடிவிற்கு வருவது சரிதானா என்கிற உங்கள் அலசல் சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. அதுபோல்,ஓர் இரு மாவட்ட வரலாறுகளே தமிழகத்தின் வரலாறு ஆகி விடமுடியுமா என்பதும் பொருள் பொதிந்ததுதான். உங்கள் குறிப்பிற்கு மிகவும் நன்றி. தமுஎகச ஒரு சார்புத் தன்மைகொண்டது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. உழைக்கும் மக்களைச் சார்ந்த படைப்பு நோக்கம் கொண்டது..
... சுந்தா
காஞ்சிபுரம் த.மு.எ.க.ச.மூலம், ஒரு சிறப்புக்கூட்டத்திற்கு என்னை அனுப்ப யோசித்ததற்கு முதலில் சுந்தா தோழருக்கு என்புத்திக்கெட்டிய யோச்னைகளைக் கடந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி தோழரே.
Post a Comment