எப்ப வருவீங்க
தூரத்தில்
நட்சத்திரம்
முளைக்காத வானம்
வெறுமையாய் இருக்கிறது.
அடையாளம் ஏற்றவன்உம்கொள்கைக்கு உடன்படிக்கை பெட்டியை திறந்து வைக்கின்றான் உம் வார்த்தை முலாம் பூசிக்கொண்டவன் முட்புதர்கள்,கற்பாறைகள்,பறவைகள் முன்னிலையில்
விதைக்கின்றான்.
இப்போதெல்லாம்
ஜலப்பிரளயம்
ரத்தமின்றி
மொத்தமாக அழிப்பதில்லை.
ரத்த பற்றுக் கொண்ட அதிபர்களுடன் கூட்டுசேர்ந்து பிசாசுகளாய் அவதரித்துஆடை அவிழ்த்து, சதைகளை வெட்டி,
கண்களைப்பிடுங்கி, மூளைச்சிதறிஇவைகள் நல்லது' என்று கண்டு
புழுப்பிடிக்கும் குப்பைகளாக மனிதர்களை
எடுத்துச் செல்கின்றார்கள் கழுகுகள் கூடாத இடத்திற்கு
கூட்டங்கூட்டமாய்
குடங் குடமாய்
சிந்தும் ரத்தம்
மண்ணை விழுங்கி
தன்னை வெளிப்படுத்தி
வரண்டு கிடக்க,
சிறு கேள்வியையும்
எழுப்பாதது ஆச்சரியம்தான்.
அழுகிய நாற்றத்தோடு
எழுகின்ற பேச்சுக்கள்
நித்திய மல்லியின்
வசத்தோடு வெளிவருகிறது மனசிலிருந்து.
அந்தரங்கமாய் திட்டமிடுவதில்லை
போக்கு காட்டவுமில்லை
இரண்டு எட்டு நடந்து
தேநீர் ரசித்து சாப்பிடுவதாகவே
கொள்ளையும், ஏமாற்றும்
பாக்கட் மணியாகவும் தனி கொலைகள் கலை நேர்த்தியுடன்
வெட்டவெளியில் அரங்கேற்றமாகிறது.
இப்போது வாசித்தாலும் ஏமாற்றம் தராத வசனம்
சீக்கிரம் வருவேன்
என்றுதான் இருக்கிறது
எப்போது வருவீங்க.வந்தாலும் எப்போதும்போல் நீங்களே எங்களுக்கா கொலையாகிவிடும் நோக்கம்தானா?
No comments:
Post a Comment