Monday, April 3, 2017

கவிதை,

நான் படைப்பாளி.
என்னை நானே நம்பிக்கொள்கிறேன்
என் எழுத்து
என்னை மீண்டும் மீண்டும் நம்பவைக்கிறது.
மற்றாரையும் நம்பவைக்க
தமிழ் கடவுள்களின்
முதுகுக்குப் பின்னால்
உதவிக்கருவிகள் கொண்டு இயங்கும்
கரங்கள் எனக்கு வாய்த்ததில்லை.
முன்னோர்களின்
பலமும், பாலமும் கிட்டியதில்லை
வாய்க்கிழிய நியாயம் பேசினால்
கிழிந்த சூத்துக்கு
ஒட்டும் கிடைப்பதில்லை
பின்புலமற்று இறங்கி
விழுந்து, எழுந்து
நிறைகள், கறைகள் கற்றேன்
எங்கெல்லாம் குழிகள் இருக்கு
அறிந்த நான்
என் படைப்புத் தொழிலை
நீண்ட அனுபவத்தோடு
என் வழித்தோன்றலின்
தோளில் ஏற்றிவிட்டேன்
நான் சந்தித்தக் குழிகளை
அவனுக்கு முன்னேராய்
சமமாக்கிக் கடக்கின்றேன்
அவன் நிண்ட அனுபவம்
பெற்றவனாக லகுவாக
நடக்கத் தொடங்குகின்றான்.
ஜேடி

No comments: