Wednesday, March 8, 2017

கவிதை

செத்த உலகம்
வாழ்தலுக்கான
பாடம் நடத்துகிறது

மூன்று வேளையும்
முற்றிய பொய்கள்
அலங்கார விளக்கின்
தோற்றமாகத்
தீப்பிடித்து எரிகிறது

மது உண்டவனின்
பித்து தலையாக
ஆங்காரம் கொண்டு
குற்றங்களை ஊக்குவிக்கிறது
பச்சை எழுதுகோல்கள்

வரம் வாங்கி வரும்
தேவத்தூதர்கள்
சாக்கடையில் முழ்கிக்கொண்டே
தெளிந்த நீரோடை
முழ்கித் திளைக்க வாருங்கள்
அழைப்பு விடுக்கிறார்கள்.

பேசும் கிளிகளின்
மூக்கை அறுக்கும்
வாள்கள்
பச்சோந்திகளிடம்
ஒப்படைக்கிறார்கள்

இறுதி வாய்ப்பாகத்
தரப்படும்
அடிக்கடி நிரூபனமாகும்
குற்றங்களில் இருந்து
பாடங்கள் கற்கப்படவில்லை.

காளி கதவைத்திற
அரிச்சந்திரா வழியைவிடு
வழியனுப்புப் பாடல்
தினந்தோறும் அனைவராலும்
பாடப்படுகிறது

இரு கரங்கள்
புன்சிரிப்போடு
எழாத கூட்டிற்கு
துளிர்க்காத
சிலுவை மரத்தை
தலைமாட்டில்
அழுந்தி நடுகின்றது

                             ஜேடி

No comments: