“அண்ணே, கெட்டவங்களுக்குதான் நல்ல காலமா இருக்குண்ணே“.
“அடே..பூசணி மண்டையா. ஒத்தச் செடி நட்டாமாதிரி சொன்னா எப்புடிடா. மனுசங்கள்ல, கொழந்தைகள் இருக்கிறான்(ள்), வாலிபன், வயசானவன் இருக்கிறான்(ள்).
எத்தனை வெரைட்டி. கிட்டக்க வாடா. தெளிவாச் சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு? அதுக்கு வயசு அளவு வச்சியிருக்கிறியா? சாதி அடையாளம் இருக்கா? சாமி சாயல் இருக்கா?
எத்தனை வெரைட்டி. கிட்டக்க வாடா. தெளிவாச் சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு? அதுக்கு வயசு அளவு வச்சியிருக்கிறியா? சாதி அடையாளம் இருக்கா? சாமி சாயல் இருக்கா?
“அண்ணே, நீங்கத் தெளிவுண்ணே. பள்ளியின், கோயிலின் சொத்துக்களை, வாரி ஊழல் வாதிக்கு எறைக்கிறாமாதிரி. வார்த்தைகளைப் பிரிச்சி போடுறீங்கண்ணே. “
அது இருக்கட்டும். சொறியாம சொல்றா, சொரக்கா மண்டையா.
“அண்ணே அண்ணே, அந்தாக்குச்சி ஐசு வாங்கிக்குடுங்கண்ணே. சப்பிக்கினே, சாலாக்காச் சொல்லுவேன்ல்ல“.
“டே, ஊன் அக்கப்போரு தாங்கமுடியலயடா, அவஅவன் இமயத்திலயும், கூட்டு ஜெபமுன்னும், பள்ளிவாசல்னும் தவமிருந்தாத்தான் ஞானம் வரும்ங்கிறான். நீ குச்சி அய்சு சப்பிக்கினு ஞானத்தை விளக்கப்போறீயா. அதையும், நான் கேட்கணுமாடா. நீ சொல்லவே வேணாண்டா.
“என்னண்ணே, இப்படிக் கோச்சிக்கிறீங்க. அம்பது பைசாதானேன்ணே. சரி அதுவும் வேணாம் விசயத்தைக் கேளுண்ணே. கொழந்தைங்க கணக்குல இல்லண்ணே. வாலிபத்தில இருந்து, வயோதிகம் வரையான மனிதர்கள் என்ற அடையாளத்தை மட்டும் வச்சிக்குவோம். சாதி, சாமி எல்லாருக்கும் பொது. இதன் அடிப்படையில் கெட்டதை விரும்புறவங்களாம், நல்லவங்கண்ணே. நல்லதை மட்டுமே செய்யிறவங்களாம் கெட்டவங்ண்ணே.
“அடே, ஞானசூன்யம்எப்படிடா அதைக் கண்டுபிடிச்சே.
எனக்கு விளக்கமாச் சொல்லு பார்ப்போம்.
எனக்கு விளக்கமாச் சொல்லு பார்ப்போம்.
1. கேடுள்ளம் கொண்டவர்களுக்கு அதாவதுண்ணே, வாழ்வதற்கு எத்தனை வகையானச் சந்தர்ப்பங்கள் அமைகின்றதோ, அத்தனை வகையையும், சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்புடையவர்களுக்கு, (இனம் இனத்தோடு சாரும் என்பதுபோல்) கேடுள்ளம் கொண்டோர் இயல்பாகவே சுகபோகத்தை அள்ளித் தருகின்றார்கள்.
2. கேடுள்ளம் கொண்டவர்கள், நல்ல விசயத்தை விரும்புகின்றவர்களைப் பார்த்ததும் குனிந்து, பணிந்து நேர்பட புகழ்ந்து, உபசரிக்கும்போது நல்லதை (நல்லதை மட்டும் செய்கிறவர்கள் அல்ல) விரும்புகிறவர்களும் கேடுள்ளமான ஊழல் வாதிகளை எல்லா இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி, கோயிலின், பள்ளியின் பொது சொத்தில் தன்னால் முடிந்ததை எழுதிவைத்துவிடுகிறார்கள்ண்ணே. அப்போ கேடுள்ளம் கொண்டவங்களுக்கு எப்பவும் நல்ல காலமாகவே அமைந்திருப்பது இயல்புதானேண்ணே.
No comments:
Post a Comment