மாடம்பாக்கம், அரசுமேல்நிலைப்பள்ளியும்.
ஜெயித்துவிட்ட ஆட்சியாளர்கள் செயலும்.
தேர்தல் பணிக்கு மாடம்பாக்கம் அரசுமேநிலைப் பள்ளிக்குப் போனேன். அப் பள்ளி பெரிய இடவசதிகொண்டதாக இருந்தது. பள்ளிக்கட்டிடங்கள் சுற்றி இருந்தது. நடுவான காலி இடங்களில் நிறைய மரங்கள் வைக்கப்பட்டிருந்தது. நல்ல வெயில் நேரத்தில்கூட அதன் நிழல் நன்றாக இருந்தது.
பள்ளி வளாகத்தின் இடது மூலையில் ஒரு பெரும் பகுதி பயன்படுத்தாமல், செடிகளும், கல்லுமுள்ளுகளும் நிறைந்த இடமாக இருக்கிறது. இரண்டு மூன்றுபாத்ரூம் சிறியக் கட்டிடங்கள் பாழடைந்து புதர்கள் மண்டிக்கிடக்கிறது. சற்று தள்ளி இன்னொரு சிறியக் கட்டிடம் ஐந்து கழிவறைகள் கொண்டதாக அதுதான் (லையன்ஸ் கிளப் கழிவறைக் கட்டடம்) தற்போது பயன்பாட்டிற்குள் இருப்பதாகவும் தோன்றியது.
பிரேயர் மேடைக்குப்பின்னால் ஒரு கைஅடி குழாய்பம்ப் இருக்கிறது வந்தவர்கள் எல்லாம் ஒருவேளை அதில்தான் அடித்துக்குளித்துக் கொள்ளவேண்டும் போல என்று நினைத்தேன்.
இரவு ஆக ஆக அந்த வளாகம் முழு இருளுக்குள் வந்துவிட்டது. தேர்தல் நடப்பதற்காக நான்கு டியூப்லைட் சில இடங்களில் போட்டார்கள். அவ்வளவு பெரிய வளாகத்தின் பரப்பிற்கு அந்த வெளிச்சம் காடை விளக்கைவிட மோசமாக இருந்தது.
பெரும்பாலான அறைகளில் லைட்டே இல்லை என்றால் ஃபேன் இருக்கமா? கிராம அலுவலர் பரிதாபப்பட்டு ஏழு பூத்துக்கு ஏழு பெடஸ்டல் ஃபேன் கொண்டுவந்துவைத்தார்.
வசதியற்ற அறைகளால் இரவுமுழுதும் தூக்கம் இல்லை. பல ஆண்கள் கழிவறையிலேயே குளித்தார்கள். சில பெண்ணாசிரியைகளும் பின்னாகவே வந்து பக்கத்து அறையை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
(சமத்துவம்) சற்று தொலைவில் இருக்கும் அக்கழிவறை வரை, வர பயந்த பல ஆசிரியைகள் பாரதராஜா படத்தில் வயதுவந்தபெண்ணுக்கு சேலையை பிடித்து குளிப்பாட்டுவதுபோல கைஅடி குழாய்பம்ப் அருகிலேயே சுற்றி நின்று குளித்துக்கொண்டார்கள். (அதிக இருட்டோடே) ஒருநாள் கூத்தென்பதால் இதையெல்லாம் கூட விட்டுவிடலாம்.
ஆயிரத்து இருநூறு பிள்ளைகள் ஆண்,பெண் சேர்ந்து படிக்கின்ற பள்ளியில் பள்ளிக் கட்டிடத்திற்கும் பாத்ரூம், கழிவறைக்கும் ஏகப்பட்ட தூரத்தில் அதுவும் ஒதுக்குப்புறமாக வைத்திருந்தால் எந்த பிள்ளைகள் எப்போது எங்குபோகிறார்கள் என்று கண்காணிக்கமுடியுமா? முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறதே என்று யோசித்தேன். தேர்தல் பணிக்காகக் கட்டப்பட்ட டீயூப்லைட் இல்லை என்றால், பள்ளி முடிந்தபிறகு அந்தப் பள்ளி இருள்சூழ்ந்த காடாக மாறிவிடும்போல. பகலிள் மட்டும் அது பள்ளியாக இருந்தால் போதுமா? இரவில் ஆளற்ற இடங்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தால், சந்தர்ப்பம் வாய்க்காத மனிதனும் சந்தர்ப்பங்களைத் தாமாக ஏற்படுத்திக்கொண்டு தவறுகள் செய்துகொள்ள வழி ஏற்படாதா?
சரியாக ஏழுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. எங்கள் பூத்தில் மொத்த வாக்காளர்கள் 791 காலையில் இருந்தே வாக்காளார்கள் உற்சாகமாக வந்தார்கள். நானும் தொடர்ந்து கவனித்து வந்தேன். எல்லாரும் நல்ல செல்வந்தர்கள், மிக உயர் பதவிகளிலும், நல்ல படிப்பிலும் கரைகண்டவர்களாக இருதுந்தார்கள். பிராமனக் குடும்பங்கள் அதிகமாக வந்தார்கள். நல்ல வசதியில் இருக்கும் கிறித்தவர்கள் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். நல்ல வசதிபடைத்த இஸ்லாமியர்களும் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். மாலை ஆறுமணியோடு 584 வாக்கு பதிவானது. அதில் ஏறக்குறைய மூன்று குடும்பம்தான் மிகவும் பின்தங்கிய குடும்பம். இரண்டே இரண்டு லோக்கல் குடிகாறர்கள்தான் அதில் இருந்தார்கள். மற்றெபடி பல பிரிவைச்சார்ந்த மிக வசதி வாய்ந்த குடும்பங்கள்தான் வந்தது.
அவர்கள் நடந்துகொள்ளும் ஒழுக்கத்தை நினைத்தால். மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது. ஒருவர் அவ்வளவு அழகாக உங்களுக்கு என்ன விதி வழங்கப்பட்டிருக்கிறதோ அதைபோல செய்யுங்கள் என்கிறார். நாங்கள் தொடர்ந்து பூத் சிலிப் வாங்கிக்கொண்டபோது. ஒரு குடும்பத் தலைவர் பூத் சிலிப் எங்களுக்கு வேண்டும் என்று ஆங்கிலத்தில் லாவகமாகப்பேசி, அற்கான காரணத்தையும் சொல்லிப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வயது முதிர்ந்த அம்மையார் இந்த ஆவணவே உங்களுக்குப் போதுமானது என் வாக்குரிமையை அனுமதியுங்கள் என்கிறார். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்தபோதுதான் இவர்கள் எவ்வளவு அழகு வாய்ந்த மேன்மக்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் தங்கள் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவரவர்களுக்கு சாதகமானவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதுபோல ஒழுக்கம் நிறைந்தவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால்தான் என்ன?
மக்களோடு இருக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறவனைவிட இவர்கள் எந்தவிதத்தில் தரம் குறைந்தவர்கள். ஏன் இவர்கள் கையில்தான் வெற்றி இருந்துவிட்டுப்போகட்டுமே என்று யோசித்தேன்.
நேரம் ஆக ஆகத்தான் நேற்று மதியம் சாப்பாட்டுக்கு ஓட்டலைத்தேடி சிலத்தெருக்கள் சுற்றியபோது அப்பள்ளியைச்சுற்றி இருக்கும் குடியிருப்புகளை பார்த்தபோதும், அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு குளியல்சோப் வாங்க வெகுதூரம் வரை நடந்தும் கிடைக்காமல் போனது நாபகம் வந்தது. இந்த இடங்களில் வயிற்றுப் பிழப்புக்காகக்கூட சிறு வியாபாரிகள் எப்போதும் உற்பத்தியாக முடியது போல. இப்பள்ளியைச் சுற்றி இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பல சமூகத்தைச்சார்ந்த மிக வசதிவாய்ந்தவர்கள். தன் குடும்பச் சுகத்திற்காக அயராது உழைப்பவர்கள். தங்கள் அளவில் மிக நிறைவான வாழ்வு வாழ்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்சியாளர்களே. இத்தனை ஆட்சியாளர்களுக்கு நடுவில் அரசுப்பள்ளிக் கேட்பாரற்றுக் கிடப்பதுபோலத்தான்.
ஒழுக்கச்சீலர்களாக தங்களைக்காட்டிக்கொண்டு அதிகாரம் பிடிப்பவர்கள். சிறு வியாபாரிகளையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களையும் கண்டுகொள்ளாமல் விடப்போகிறார்கள்.
இவர்களைவிட மக்களோடு மக்களாக இருக்கிறேன். மக்களோடு ஓடிவருகிறேன் இடையில் கொஞ்சம் ஏப்பம் விட்டுக்கொள்கிறேன்
(ஏப்பத்தை, மனிதன் குசு விடுதலில் கழிக்கமுடியுமா?) என்கிறவன் பராவாயில்லைதானே.
ஜெயித்துவிட்ட ஆட்சியாளர்கள் செயலும்.
தேர்தல் பணிக்கு மாடம்பாக்கம் அரசுமேநிலைப் பள்ளிக்குப் போனேன். அப் பள்ளி பெரிய இடவசதிகொண்டதாக இருந்தது. பள்ளிக்கட்டிடங்கள் சுற்றி இருந்தது. நடுவான காலி இடங்களில் நிறைய மரங்கள் வைக்கப்பட்டிருந்தது. நல்ல வெயில் நேரத்தில்கூட அதன் நிழல் நன்றாக இருந்தது.
பள்ளி வளாகத்தின் இடது மூலையில் ஒரு பெரும் பகுதி பயன்படுத்தாமல், செடிகளும், கல்லுமுள்ளுகளும் நிறைந்த இடமாக இருக்கிறது. இரண்டு மூன்றுபாத்ரூம் சிறியக் கட்டிடங்கள் பாழடைந்து புதர்கள் மண்டிக்கிடக்கிறது. சற்று தள்ளி இன்னொரு சிறியக் கட்டிடம் ஐந்து கழிவறைகள் கொண்டதாக அதுதான் (லையன்ஸ் கிளப் கழிவறைக் கட்டடம்) தற்போது பயன்பாட்டிற்குள் இருப்பதாகவும் தோன்றியது.
பிரேயர் மேடைக்குப்பின்னால் ஒரு கைஅடி குழாய்பம்ப் இருக்கிறது வந்தவர்கள் எல்லாம் ஒருவேளை அதில்தான் அடித்துக்குளித்துக் கொள்ளவேண்டும் போல என்று நினைத்தேன்.
இரவு ஆக ஆக அந்த வளாகம் முழு இருளுக்குள் வந்துவிட்டது. தேர்தல் நடப்பதற்காக நான்கு டியூப்லைட் சில இடங்களில் போட்டார்கள். அவ்வளவு பெரிய வளாகத்தின் பரப்பிற்கு அந்த வெளிச்சம் காடை விளக்கைவிட மோசமாக இருந்தது.
பெரும்பாலான அறைகளில் லைட்டே இல்லை என்றால் ஃபேன் இருக்கமா? கிராம அலுவலர் பரிதாபப்பட்டு ஏழு பூத்துக்கு ஏழு பெடஸ்டல் ஃபேன் கொண்டுவந்துவைத்தார்.
வசதியற்ற அறைகளால் இரவுமுழுதும் தூக்கம் இல்லை. பல ஆண்கள் கழிவறையிலேயே குளித்தார்கள். சில பெண்ணாசிரியைகளும் பின்னாகவே வந்து பக்கத்து அறையை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
(சமத்துவம்) சற்று தொலைவில் இருக்கும் அக்கழிவறை வரை, வர பயந்த பல ஆசிரியைகள் பாரதராஜா படத்தில் வயதுவந்தபெண்ணுக்கு சேலையை பிடித்து குளிப்பாட்டுவதுபோல கைஅடி குழாய்பம்ப் அருகிலேயே சுற்றி நின்று குளித்துக்கொண்டார்கள். (அதிக இருட்டோடே) ஒருநாள் கூத்தென்பதால் இதையெல்லாம் கூட விட்டுவிடலாம்.
ஆயிரத்து இருநூறு பிள்ளைகள் ஆண்,பெண் சேர்ந்து படிக்கின்ற பள்ளியில் பள்ளிக் கட்டிடத்திற்கும் பாத்ரூம், கழிவறைக்கும் ஏகப்பட்ட தூரத்தில் அதுவும் ஒதுக்குப்புறமாக வைத்திருந்தால் எந்த பிள்ளைகள் எப்போது எங்குபோகிறார்கள் என்று கண்காணிக்கமுடியுமா? முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறதே என்று யோசித்தேன். தேர்தல் பணிக்காகக் கட்டப்பட்ட டீயூப்லைட் இல்லை என்றால், பள்ளி முடிந்தபிறகு அந்தப் பள்ளி இருள்சூழ்ந்த காடாக மாறிவிடும்போல. பகலிள் மட்டும் அது பள்ளியாக இருந்தால் போதுமா? இரவில் ஆளற்ற இடங்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தால், சந்தர்ப்பம் வாய்க்காத மனிதனும் சந்தர்ப்பங்களைத் தாமாக ஏற்படுத்திக்கொண்டு தவறுகள் செய்துகொள்ள வழி ஏற்படாதா?
சரியாக ஏழுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. எங்கள் பூத்தில் மொத்த வாக்காளர்கள் 791 காலையில் இருந்தே வாக்காளார்கள் உற்சாகமாக வந்தார்கள். நானும் தொடர்ந்து கவனித்து வந்தேன். எல்லாரும் நல்ல செல்வந்தர்கள், மிக உயர் பதவிகளிலும், நல்ல படிப்பிலும் கரைகண்டவர்களாக இருதுந்தார்கள். பிராமனக் குடும்பங்கள் அதிகமாக வந்தார்கள். நல்ல வசதியில் இருக்கும் கிறித்தவர்கள் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். நல்ல வசதிபடைத்த இஸ்லாமியர்களும் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். மாலை ஆறுமணியோடு 584 வாக்கு பதிவானது. அதில் ஏறக்குறைய மூன்று குடும்பம்தான் மிகவும் பின்தங்கிய குடும்பம். இரண்டே இரண்டு லோக்கல் குடிகாறர்கள்தான் அதில் இருந்தார்கள். மற்றெபடி பல பிரிவைச்சார்ந்த மிக வசதி வாய்ந்த குடும்பங்கள்தான் வந்தது.
அவர்கள் நடந்துகொள்ளும் ஒழுக்கத்தை நினைத்தால். மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது. ஒருவர் அவ்வளவு அழகாக உங்களுக்கு என்ன விதி வழங்கப்பட்டிருக்கிறதோ அதைபோல செய்யுங்கள் என்கிறார். நாங்கள் தொடர்ந்து பூத் சிலிப் வாங்கிக்கொண்டபோது. ஒரு குடும்பத் தலைவர் பூத் சிலிப் எங்களுக்கு வேண்டும் என்று ஆங்கிலத்தில் லாவகமாகப்பேசி, அற்கான காரணத்தையும் சொல்லிப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வயது முதிர்ந்த அம்மையார் இந்த ஆவணவே உங்களுக்குப் போதுமானது என் வாக்குரிமையை அனுமதியுங்கள் என்கிறார். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்தபோதுதான் இவர்கள் எவ்வளவு அழகு வாய்ந்த மேன்மக்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் தங்கள் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவரவர்களுக்கு சாதகமானவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதுபோல ஒழுக்கம் நிறைந்தவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால்தான் என்ன?
மக்களோடு இருக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறவனைவிட இவர்கள் எந்தவிதத்தில் தரம் குறைந்தவர்கள். ஏன் இவர்கள் கையில்தான் வெற்றி இருந்துவிட்டுப்போகட்டுமே என்று யோசித்தேன்.
நேரம் ஆக ஆகத்தான் நேற்று மதியம் சாப்பாட்டுக்கு ஓட்டலைத்தேடி சிலத்தெருக்கள் சுற்றியபோது அப்பள்ளியைச்சுற்றி இருக்கும் குடியிருப்புகளை பார்த்தபோதும், அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு குளியல்சோப் வாங்க வெகுதூரம் வரை நடந்தும் கிடைக்காமல் போனது நாபகம் வந்தது. இந்த இடங்களில் வயிற்றுப் பிழப்புக்காகக்கூட சிறு வியாபாரிகள் எப்போதும் உற்பத்தியாக முடியது போல. இப்பள்ளியைச் சுற்றி இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பல சமூகத்தைச்சார்ந்த மிக வசதிவாய்ந்தவர்கள். தன் குடும்பச் சுகத்திற்காக அயராது உழைப்பவர்கள். தங்கள் அளவில் மிக நிறைவான வாழ்வு வாழ்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்சியாளர்களே. இத்தனை ஆட்சியாளர்களுக்கு நடுவில் அரசுப்பள்ளிக் கேட்பாரற்றுக் கிடப்பதுபோலத்தான்.
ஒழுக்கச்சீலர்களாக தங்களைக்காட்டிக்கொண்டு அதிகாரம் பிடிப்பவர்கள். சிறு வியாபாரிகளையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களையும் கண்டுகொள்ளாமல் விடப்போகிறார்கள்.
இவர்களைவிட மக்களோடு மக்களாக இருக்கிறேன். மக்களோடு ஓடிவருகிறேன் இடையில் கொஞ்சம் ஏப்பம் விட்டுக்கொள்கிறேன்
(ஏப்பத்தை, மனிதன் குசு விடுதலில் கழிக்கமுடியுமா?) என்கிறவன் பராவாயில்லைதானே.
1 comment:
மாடம் பாக்கம் ஊரே இயற்கையில் ஒரு அமைப்பாக, கோர்வையாக அமைந்த ஊர் .
சில முறை அங்கு சென்றுள்ள நான் அரசுப் பள்ளி இதுவரை பார்த்தது இல்லை .
அடுத்த முறை கண்டிப்பாக விஜயம் உண்டு .
கடைகள் அதிகம் உண்டே, அதுவும் சித்தர் கோவில் அருகில் அதிக அளவில் கடைகள் உண்டு
Post a Comment