Tuesday, December 24, 2013

கவிதை,



எல்லாமே முடிந்து விட்டது
இனி நடப்பதை ஏற்றுக்கொள்வதினால்
என்ன மிஞ்சப்போகிறது.

ஒன்றுமில்லாமல் உருகுலைந்த பிறகு
புதிய நம்பிக்கை எதன் அடிப்படையில்
துளிர்விட சாத்தியம் இருக்கிறது.

போதும், நினைவிலிருக்கிறதை
ஒரு மின்னணுவின் தவறுபோல
துடைத்தழித்திவிட்டு
வெற்று மனம்கொண்டு
உடல் கணம் பூணும் முடிவாயிற்று.

தண்டவாளங்களை நம்பி வந்து,
பயணத்தை முடித்துக்கொண்டு
முற்றிலும் வெறுமையாகி
மீண்டும் தொடங்குகிறது
புதிய இலக்கு நோக்கி
இருதலைகொண்டு நீண்டு நிற்கும் ரயில்

கட்டணமற்ற வழிகள்
வீதியில் விருதாவாய் கிடக்கிறது
கண் பார்த்ததால்
மேலும்,வாழமுடிகிறது.

ஜேடி

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
 நல் வாழ்த்துக்கள்.

No comments: