சாதியின் குரூரத்தைக்குடித்து, நிறைவின் ஏப்பமிடும் படைப்பாளிகள்.
அதிகார குரூரத்தை அறியாமலே, தப்பிக்க பழிசுமத்தும் சாமானியர்கள்
1
கடந்த சனியன்று (15.8.2013) குழந்தை, ஒரு வருடம் பூர்த்திசெய்யும் விழாவிற்கு கவிஞர் என்னை அழைத்தார். நான் சென்றிருந்தேன். கலியாண மண்டபத்தில் அநேக மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தார்கள். இந்தமாதிரி விழாக்களில் கிராமியசூழல் நிறைந்த மக்களைக் கண்டு எவ்வளவு நாளியிற்று என்று மனம் சந்தோஷம் அடைந்தது. எனக்கு அக்கூட்டத்தில் அழைத்த கவிஞரைத்தவிர யாரையுமே தெரிந்திருக்கவில்லை. அந்நிகழ்வில் எனக்குத்தெரிந்த இன்னொரு நாட்டுப்புறக் கலைஞரும் வந்திருந்தார். அவருக்கு பல நண்பர்கள் தெரிந்திருந்தார்கள். தெரிந்திருந்தவர்கள் எல்லாருமே பதினைந்து வருஷத்திற்குமேல் பழகியவர்கள். நாட்டுபுற கலைகளில் ஒன்றாக இயங்குபவர்கள்.
நானும், கலைஞரும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிலரைக் காண்பித்து “அதோ போகிறார் இல்ல, அவர் ஒரு கவிஞர். இவர் தனியார் டி வி நிகழ்ச்சியில் சின்னச் சின்ன நிகழ்வுகளை நடத்துகிறவர்“ என்று சற்று தூரத்தில் நடமாடுகிறவர்களைக் காண்பித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்த கவிஞர் வந்தார். நான் நிகழ்வுக்கு வந்ததின் வருகையைப் பதிவு செய்யும் விதமாக கவிஞருக்கு (கவிஞர் என்று அப்பிதழ்களில் குறிப்பிட்டு இருந்ததால் நானும் அதையே இங்கு உபயோகிக்கின்றேன்.) வாழ்த்து சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டேன். அவரும் வந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக உடல் தழுவி கைக்குளுக்கினார். பிறகு தம்பதிகளுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துரைகள் சொல்லி கேக் வெட்டப்பட்டது. சில முக்கியஸ்த்தர்கள் குழந்தையையும், தம்பதிகளையும் வாழ்த்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் நாட்டுப்புற கலைஞரும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெரியவர் வந்து சார் போங்க பந்தி காலியாக்கிடக்கிறது போய் சாப்பிடுங்கள் என்றார். சென்றோம். கூட்டுபொரியலுடன் நல்ல சோறு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு வந்து உட்கார்ந்தோம். தம்பதிகள் ஒவ்வொரு முக்கியஸ்தராக அழைத்து கைத்தறித்துண்டுகளை, போட்டு மரியாதை செய்துக்கொண்டிருந்தார். கவிஞர் நாங்கள் வந்ததைப் பார்த்து, அவருக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் இன்னும் இரண்டு துண்டுகளை எடுத்துவாருங்கள். அவர்களும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு போடவேண்டும் என்றார். என்னை அத்தார், பிறகு நாட்டுபுற கலைஞரை அழைத்தார் துண்டுபோடப்பட்டது.
நான் வாங்கிவந்து உட்கார்ந்துகொண்டேன். கூட்டம் இப்படியும் அப்படியும் நெறுக்கும்படியாக இருந்தது. நாட்டுபுற கலைஞர் நின்றவாரே அத்துண்டை மடிக்க தோளில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார். விழாத்தம்பதிகளுக்கு நெருக்கமாக நின்றிருந்த நபர் ஒருவர் நாட்டுபுற கலைஞருக்கு அருகில் வந்து மிக மெல்லமான குரலில் ‘டே அதைக்குடுடா‘ என்று வாய்க்கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, கை வேகமாக துண்டை பிடுங்கிக்கொண்டது. கலைஞரும் தன் அனுமதியைப் பொருட்படுத்தாமலே தனக்கு வந்தது கைவிட்டுபோகிறது என்பதை அறியாமல். தானே மனமுவந்து தருவதுபோல “ஆம் இந்தாங்க யாருக்காவது போடுங்க“ என்று நின்றார்.
அவருக்கு பார்வை சற்று குறைவுள்ளதால் எதை கவனித்தார் என்றெ தெரியவில்லை. நான் சற்று அதிர்ந்துபோய் சரி ஏதோ பற்றாக்குறை இருக்கும்போல, யாராவது முக்கியஸ்த்தர்களுக்கு, இல்லாமல் இருக்கும் அதனால் வாங்குகிறார் என்று யோசித்தேன். ஆனால், பிடுங்கிய நபர் ஏதோக் கந்தைத்துணியை எறிவதுபோல் ஒரு மூலையில் போட்டார். அது ஒரு பென்சில் விழுந்தது. அக்கூட்டத்தில் யாரோ ஒரு நபர் அத்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு அவரும் கரிக்கந்தையைப்போல் அங்கேயே விட்டுவிட்டார். அந்தத் துண்டு ஜனக்கூட்டத்தில் காலுக்கடியில் மாட்டிக்கொண்ட குப்பையைப்போல இப்படியும் அப்படியும் சுருங்கி, விரிந்துகொண்டிருந்தது.
எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. “சரி நண்பரே போகலாம். நீங்கள் வருவதாக இருந்தால் போகும் வழியில் இறக்கிவிடுகிறேன்“ என்றேன். நானும் வந்துவிடுகிறேன் என்றார். நான் பயணித்துக்கொண்டே மெதுவாக வினவினேன். “உன்னிடம் டவலை வாங்கினாரே அவரு யாரு“ என்றேன்.
“அவர் ஒரு கவிஞர். மிக நெருங்கிய நண்பரும்கூட“ என்றார். நான் மேலும் எப்படிக் கேட்பது என்று யோசித்தேன். இருந்தாலும் அச்செயல் என் தயக்கத்தை உடைத்தது.
அவரு ஏன் உன் கையில் இருந்த டவலை இழுத்தார்“ என்றேன். அய்யோ, அப்படியில்ல யாருக்காவது பற்றாக்குறையாக இருந்திருக்கும், அதற்குத்தான் வாங்கியிருப்பார்“ என்றார்.
நண்பர், முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நபர் உன்னிடம் இருந்து பிடுங்கி ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டார். வேறு யாரோ ஒரு நபர் அந்தத்துண்டில் முகத்தைத் துடைத்துப்போடுகிறார், ஆனால் வேறு இடத்திலிருந்து டவல்கள் மரியாதை செய்ய கொடுக்கப்படுகிறது. என்றேன். நண்பரால் அதற்குமேல் பேசமுடியவில்லை.
ஆமான்யா, என்னதான் பழகினாலும் பல நேரங்களில் அப்படித்தான் செய்வார். அவரு எம்.பீ.சி இனம் என்றார். அப்போதுதான் சாதியின் கொடூர முகத்தை நேரில் கண்கூடாக அனுபவித்தேன். பதினைந்து வருஷமாக பழகுகிற ஒரு மனிதனை, அதுவும் கலை சம்பந்தப்பட்ட துறையில் ஒன்றாக இயங்குகிற நபருக்கு, கேவலம் இருபது ரூபாய் கைத்தறித்துண்டு தோளில் விழுவதையேத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால். இச்சமூகத்தில் பொருளாதார மேம்பாடு இல்லாமல் ஒரு சாமானியன் எதைதான் சாதிக்கமுடியும்..... தொடரும்
ஜேடி
அதிகார குரூரத்தை அறியாமலே, தப்பிக்க பழிசுமத்தும் சாமானியர்கள்
1
கடந்த சனியன்று (15.8.2013) குழந்தை, ஒரு வருடம் பூர்த்திசெய்யும் விழாவிற்கு கவிஞர் என்னை அழைத்தார். நான் சென்றிருந்தேன். கலியாண மண்டபத்தில் அநேக மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தார்கள். இந்தமாதிரி விழாக்களில் கிராமியசூழல் நிறைந்த மக்களைக் கண்டு எவ்வளவு நாளியிற்று என்று மனம் சந்தோஷம் அடைந்தது. எனக்கு அக்கூட்டத்தில் அழைத்த கவிஞரைத்தவிர யாரையுமே தெரிந்திருக்கவில்லை. அந்நிகழ்வில் எனக்குத்தெரிந்த இன்னொரு நாட்டுப்புறக் கலைஞரும் வந்திருந்தார். அவருக்கு பல நண்பர்கள் தெரிந்திருந்தார்கள். தெரிந்திருந்தவர்கள் எல்லாருமே பதினைந்து வருஷத்திற்குமேல் பழகியவர்கள். நாட்டுபுற கலைகளில் ஒன்றாக இயங்குபவர்கள்.
நானும், கலைஞரும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிலரைக் காண்பித்து “அதோ போகிறார் இல்ல, அவர் ஒரு கவிஞர். இவர் தனியார் டி வி நிகழ்ச்சியில் சின்னச் சின்ன நிகழ்வுகளை நடத்துகிறவர்“ என்று சற்று தூரத்தில் நடமாடுகிறவர்களைக் காண்பித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்த கவிஞர் வந்தார். நான் நிகழ்வுக்கு வந்ததின் வருகையைப் பதிவு செய்யும் விதமாக கவிஞருக்கு (கவிஞர் என்று அப்பிதழ்களில் குறிப்பிட்டு இருந்ததால் நானும் அதையே இங்கு உபயோகிக்கின்றேன்.) வாழ்த்து சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டேன். அவரும் வந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக உடல் தழுவி கைக்குளுக்கினார். பிறகு தம்பதிகளுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துரைகள் சொல்லி கேக் வெட்டப்பட்டது. சில முக்கியஸ்த்தர்கள் குழந்தையையும், தம்பதிகளையும் வாழ்த்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் நாட்டுப்புற கலைஞரும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெரியவர் வந்து சார் போங்க பந்தி காலியாக்கிடக்கிறது போய் சாப்பிடுங்கள் என்றார். சென்றோம். கூட்டுபொரியலுடன் நல்ல சோறு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு வந்து உட்கார்ந்தோம். தம்பதிகள் ஒவ்வொரு முக்கியஸ்தராக அழைத்து கைத்தறித்துண்டுகளை, போட்டு மரியாதை செய்துக்கொண்டிருந்தார். கவிஞர் நாங்கள் வந்ததைப் பார்த்து, அவருக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் இன்னும் இரண்டு துண்டுகளை எடுத்துவாருங்கள். அவர்களும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு போடவேண்டும் என்றார். என்னை அத்தார், பிறகு நாட்டுபுற கலைஞரை அழைத்தார் துண்டுபோடப்பட்டது.
நான் வாங்கிவந்து உட்கார்ந்துகொண்டேன். கூட்டம் இப்படியும் அப்படியும் நெறுக்கும்படியாக இருந்தது. நாட்டுபுற கலைஞர் நின்றவாரே அத்துண்டை மடிக்க தோளில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார். விழாத்தம்பதிகளுக்கு நெருக்கமாக நின்றிருந்த நபர் ஒருவர் நாட்டுபுற கலைஞருக்கு அருகில் வந்து மிக மெல்லமான குரலில் ‘டே அதைக்குடுடா‘ என்று வாய்க்கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, கை வேகமாக துண்டை பிடுங்கிக்கொண்டது. கலைஞரும் தன் அனுமதியைப் பொருட்படுத்தாமலே தனக்கு வந்தது கைவிட்டுபோகிறது என்பதை அறியாமல். தானே மனமுவந்து தருவதுபோல “ஆம் இந்தாங்க யாருக்காவது போடுங்க“ என்று நின்றார்.
அவருக்கு பார்வை சற்று குறைவுள்ளதால் எதை கவனித்தார் என்றெ தெரியவில்லை. நான் சற்று அதிர்ந்துபோய் சரி ஏதோ பற்றாக்குறை இருக்கும்போல, யாராவது முக்கியஸ்த்தர்களுக்கு, இல்லாமல் இருக்கும் அதனால் வாங்குகிறார் என்று யோசித்தேன். ஆனால், பிடுங்கிய நபர் ஏதோக் கந்தைத்துணியை எறிவதுபோல் ஒரு மூலையில் போட்டார். அது ஒரு பென்சில் விழுந்தது. அக்கூட்டத்தில் யாரோ ஒரு நபர் அத்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு அவரும் கரிக்கந்தையைப்போல் அங்கேயே விட்டுவிட்டார். அந்தத் துண்டு ஜனக்கூட்டத்தில் காலுக்கடியில் மாட்டிக்கொண்ட குப்பையைப்போல இப்படியும் அப்படியும் சுருங்கி, விரிந்துகொண்டிருந்தது.
எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. “சரி நண்பரே போகலாம். நீங்கள் வருவதாக இருந்தால் போகும் வழியில் இறக்கிவிடுகிறேன்“ என்றேன். நானும் வந்துவிடுகிறேன் என்றார். நான் பயணித்துக்கொண்டே மெதுவாக வினவினேன். “உன்னிடம் டவலை வாங்கினாரே அவரு யாரு“ என்றேன்.
“அவர் ஒரு கவிஞர். மிக நெருங்கிய நண்பரும்கூட“ என்றார். நான் மேலும் எப்படிக் கேட்பது என்று யோசித்தேன். இருந்தாலும் அச்செயல் என் தயக்கத்தை உடைத்தது.
அவரு ஏன் உன் கையில் இருந்த டவலை இழுத்தார்“ என்றேன். அய்யோ, அப்படியில்ல யாருக்காவது பற்றாக்குறையாக இருந்திருக்கும், அதற்குத்தான் வாங்கியிருப்பார்“ என்றார்.
நண்பர், முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நபர் உன்னிடம் இருந்து பிடுங்கி ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டார். வேறு யாரோ ஒரு நபர் அந்தத்துண்டில் முகத்தைத் துடைத்துப்போடுகிறார், ஆனால் வேறு இடத்திலிருந்து டவல்கள் மரியாதை செய்ய கொடுக்கப்படுகிறது. என்றேன். நண்பரால் அதற்குமேல் பேசமுடியவில்லை.
ஆமான்யா, என்னதான் பழகினாலும் பல நேரங்களில் அப்படித்தான் செய்வார். அவரு எம்.பீ.சி இனம் என்றார். அப்போதுதான் சாதியின் கொடூர முகத்தை நேரில் கண்கூடாக அனுபவித்தேன். பதினைந்து வருஷமாக பழகுகிற ஒரு மனிதனை, அதுவும் கலை சம்பந்தப்பட்ட துறையில் ஒன்றாக இயங்குகிற நபருக்கு, கேவலம் இருபது ரூபாய் கைத்தறித்துண்டு தோளில் விழுவதையேத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால். இச்சமூகத்தில் பொருளாதார மேம்பாடு இல்லாமல் ஒரு சாமானியன் எதைதான் சாதிக்கமுடியும்..... தொடரும்
ஜேடி

No comments:
Post a Comment