Sunday, November 25, 2012

கவிதை

   
 இருட்டு மயம்

நான் உறங்கிக்கொண்டிருக்கும்போதே
என்னை பொருட்படுத்தாமல்
தலையில் கல்லைப்போடுவதுபோல்
நிறுத்தப்படுகிறது
அறையின் மின் விசிறி

குழந்தை கதறும் குரல்கேட்டு
குளிர்ப் பதனப்பெட்டியில் உறங்கும்
வாடகை மார்பகத்தை எடுக்கிறாள்
கெட்டபிறகும்
வெண்மையாக இருக்கும்
வாடகை மார்பகம்
தீயிலிட்டபோதுதான்
குழந்தையோடு சேர்த்து
தாயும் கதறுகிறாள்
அதிகாலைதோறும்

எட்டு வயதில்
மூணு பைசா கூலிக்கு
முதலாளியிடம்  முடக்கப்பட்ட வாழ்வு
கலையின் முதுகுத் தோலை
உறிக்கும் விதமாக
கையில் உயிர்த்தெழுந்தது
கூர் உளி

இருபது ஆண்டுகளாய்
இயந்திரத் துணையுடன்
அரசியல்வாதி கந்துவட்டிக்காரன்,
கையூட்டுவாங்குபவன்  சிக்கன சீமான்களின்
தலைவாசலை
என் மூளையில்
வடிந்தத் தச்சு கலையால்
நிறப்பி வைத்தேன்

போவதும் வருவதும்
அதன் இயல்பானதால்
கலையின் பிரம்மாவை
காலணிபோல் கயட்டிவிட்டு
கையில் பிரஷ் ஏந்தி
காலந்தள்ளப் புறப்பட்டேன்
பெயிண்ட் வேலைக்கு.

குடி மக்கள்
குடிக்காமலே
இரவும் பகலும்
தள்ளாடுகிறார்கள்
கார்பரேட் கம்பெனிகளின்
கழிவறையில் எரிகிறது
500 வாட்ஸ் சோடியம்
கருத்தடை  மாத்திரையும்  காண்டமும்
கண்ட இடத்தில்
வீசாமல் இருக்க.

ஜேடி 

No comments: