Monday, February 13, 2012

கவிதை

 குருட்டாட்டம்


கண்களைக் குருட்டாட்டம்
காட்டுகிறது இருள்
நீயோ
அதற்குள் நீச்சலடித்து வருகிறாய் 
கண்கூசாத ஒளியை உமிழ்ந்து
இறக்கைத் தெரியாத மின்மினியாய்


உலை  இல்லாமலே
குட்டி விளக்குடன் வருகின்றாய்
அது  கண்களைக் கூசச்செய்யவும் இல்லை
மனதுக்குப் பிடித்தமானபடி இருக்கிறது
உன் பய்னதராத வெளிச்சம்
இருந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்  இரவுமுழுதும்.

விடிந்தபொழுது
உன் தோளில் சாய்ந்தபடியே
நான்
மரணிக்க வேண்டும் என்ற வார்த்தையை
என் வாயினால் வரவழைக்க
நீ ஆசைப்படுவாய்


இரு இறக்கையும்  
சமநிலைச் செயல் குறையோடு
எந்தப் பறவை இலக்கை எட்டிவிடமுடியும்
நீ சொல்லும் காதலில்
மின்மினியின் ஒளிகூட இல்லாமல்
அடிக்கடி குருட்டாட்டம்
தலைகாட்டுகிறது எனக்கு.


எமி



No comments: