Sunday, November 7, 2010

கவிதை

          கப்பலைக் கடத்தும்  துடுப்பு         

எனக்குச் சொந்தமான கப்பலில்

துடுப்புடன் கடலில் பயணிக்கிறேன்.
(திசைக் காட்டும் கருவி  இருக்கிறது)
முடியாது என்று சொல்லிவிடாதீர்கள்
அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

என் முன்னோர்களிடம் 
பழகிய சிலதுளி நாழிகையில் தான்
என்னை தைரியப்படுத்திக்கொண்டேன்.

நான் கண்ணுக்குப்  புலப்படாத
எதையோ தேடிக்கொண்டே இருக்கிறேன்.

நிதானமில்லாமல் முந்தி முந்தி முட்டிக்கொள்ளும்
கூட்டங்களைக் கண்டு மிரண்டு ஒதுங்குகிறேன்.

வாழ்விடங்கள் 
பயனற்று ஒட்டிக்கொண்டு

கூடவரும் நிழலாக
நினைக்கதோன்றுகிறது.  

பணங்காய்க்காத
பல கிளைகளைக்கொண்ட
ஒரு சில மரங்களுடன்
அதன் இலைகள் பேசும் சத்தத்தில்
நாள் முழுக்க காத்துக்கிடக்கிறேன்.

இவைகளின் உந்துதலால்தான்
எனக்குள்ளக்  கப்பலை
கிடைத்த  துப்புக்கொண்டு ஓட்டுகிறேன்.

கடல் யாருக்கும் சொந்தமானதல்ல
ஒரு மாயையான எல்லை வேண்டுமென்றால்
வரைந்து வைத்திருக்கலாம் --அதனால்
முடியாது என்று சொல்லி விடாதீர்கள்.
திசைக்காட்டும்  கருவியை வைத்துக்கொண்டு
மேலும் ஆராய்கிறேன்.

வாழ்வாதாரம் தவிர்த்து
ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
அது ஒன்றே போதுமென்று 
பெருமையாய் நினைக்கிறேன்
துடுப்பு கையிலேதான் இருக்கிறது.
    
நம்புழுதி

No comments: